சனி, 9 செப்டம்பர், 2017

அமைச்சர் விஜயபாஸ்கர் ரூ.285 கோடி வரி ஏய்ப்பு : வ.வரித்துறை விசாரணையில் கண்டுபிடிப்பு

தமிழக சுகாதார அமைச்சர், விஜயபாஸ்கர் மீதான வருமான வரி வழக்கு முடிவுக்கு வந்து விட்டதாக, வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். அவருடைய மணல் குவாரியில், 285 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ.89 கோடி பட்டுவாடா :  சென்னை, ஆர்.கே.நகரில் நடக்கவிருந்த இடைத்தேர்தலை ஒட்டி, ஏப்., 8ல், அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், சுகாதார துறை பெண் அதிகாரி கீதாலட்சுமி, முன்னாள், எம்.பி., ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளில், வருமான வரித் துறையினர், ஒரே நாளில் சோதனை நடத்தினர். விஜயபாஸ்கரின் சென்னை வீடு மட்டுமின்றி, புதுக்கோட்டை
மாவட்டம், இலுப்பூரில் உள்ள வீட்டிலும் சோதனை நடந்தது. விஜயபாஸ்கரின் நண்பர் வீட்டில் சிக்கிய ஆவணங்களில், ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு, அமைச்சர்களால், 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்தது தெரிய வந்தது; அதை ஆதாரமாக வைத்து, இடைத்தேர்தல்ரத்து செய்யப்பட்டது. பின், விஜயபாஸ்கர், அவரது தந்தை சின்னதம்பி மற்றும் குடும்பத்தாரிடம் தொடர்ந்து விசாரணை நடந்தது.
அப்போ ஏன் இன்னும் இந்த குற்றவாளி பதவியில் இருக்கிறான் ? ஊழலே நடக்கவில்லை என்று ஜால்ரா தட்டியே தமிழிசை ராஜா எல்லாம் எங்கே ?


சி.பி.ஐ., வசம் சிக்கியுள்ள, மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டி கொடுத்த வாக்குமூலம் காரணமாக, அமைச்சருக்கு சொந்தமான, புதுக்கோட்டை மாவட்டம், திருவேங்கைவாசலில் உள்ள குவாரியிலும், சோதனை நடந்தது. பின், மத்திய பொதுப்பணித் துறை உதவியுடன், அங்கு வரி ஏய்ப்பு கணக்கிடப்பட்டது.

இது தொடர்பாக, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி புலனாய்வு அலுவலகத்தில், விஜயபாஸ்கர், நான்கு முறை விசாரணைக்கு ஆஜரானார். இறுதியாக, ஆக., 3ல் ஆஜரானபோது, 'நான் இந்த வழக்கில் இருந்து, நிச்சயம் மீண்டு வருவேன்' என்றார். இப்போது, அவரது வழக்கு முடியும் நிலையை எட்டிஉள்ளது.

அபராதம் :
இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: விஜயபாஸ்கர் மீதான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பாக, அவரிடம் நான்குமுறை விசாரித்தோம். அவரிடம் தேவையான விபரங்கள் பெறப்பட்டன. அவரது குடும்பத்திற்கு சொந்தமான, கல்வி நிறுவனங்கள் மற்றும் குவாரியில் நடைபெற்ற வரி ஏய்ப்பு குறித்து, முழு அளவில் விசாரணை நடந்து முடிந்து உள்ளது.

அவருடைய மணல் குவாரியில், 264 கோடி ரூபாய்; கல்வி நிறுவனங்களில், 21 கோடி ரூபாய், என, 285 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்தது தெரிய வந்தது. அவற்றுக்கு, அவரிடமிருந்து உரிய அபராதம் மற்றும் வரி வசூலிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். தினமலர்

கருத்துகள் இல்லை: