செவ்வாய், 5 செப்டம்பர், 2017

வளர்மதி மீதான குண்டாஸ் சட்டம் செல்லுபடி அற்றது ... உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து .சேலம், பெரியார் பல்கலையில், இதழியல் படிக்கும் மாணவி, வளர்மதி; கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டங்களுக்கு ஆதரவாக, துண்டு பிரசுரங்கள் வினியோகித்ததாகவும், போராட்டத்துக்கு துாண்டியதாகவும், வளர்மதியை போலீசார் கைது செய்தனர். பின், குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை, சேலம் போலீஸ் கமிஷனர், ஜூலை, 17ல் பிறப்பித்தார். இதனை எதிர்த்து அவரது தந்தை மாதையன் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த ஐகோர்ட், வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை: