வியாழன், 4 மே, 2017

நீதிபதி கிருபாகரன் : ஒரு கோடி ரூபாயை கீழடி அகழ்வாராசிக்கு வழங்கவேண்டும் .. தமிழக அரசுக்கு அபராதம் !

Manikandan Vathan கீழடி கிருபாகரன் தனியார் மருத்துவக்கல்லூரியில், தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய 50 சதவீத முதுகலை மருத்துவ படிப்பு சீட்டுகளை கேட்டுப்பெற தவறிய காரணத்துக்காக தமிழக அரசுக்கும், மத்திய மருத்துவ கவுன்சிலுக்கு தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறி உள்ளார் நீதிபதி கிருபாகரன். இதில் ஒரு கோடி ரூபாயை கீழடி அகழ்வாராய்ச்சிக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுருக்கிறார். எப்படியும் இந்த தீர்ப்புக்கு மேல் நீதிமன்றம் நாளையோ, நாளைய மறுநாளோ தடை விதிக்கத்தான் போகிறது. ஆனால் பூணூல் மன்றத்தில் இருந்து கொண்டே, அதுவும் இன்றைய சூழ்நிலையில் தமிழ் உணர்வை வெளிப்படுத்திய நீதிபதி கிருபாகரனை பாராட்டியே ஆக வேண்டும் ! முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: