திங்கள், 1 மே, 2017

நாங்கள் தலித் அல்ல ... எங்களை தேவேந்திர குல வேளாளர்கள் என்று அழையுங்கள் ... பார்பனீயத்தின் புதிய அடிமைகள்!

keetru.nandhan பள்ளர் சாதித் தலைவர்கள் 'நாங்கள் தலித் அல்ல, ஆண்ட பரம்பரையினர்' என்றும், 'எங்களை தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வேண்டும்' என்றும் கூறுவதன் பின்னே உள்ள அரசியல் சரியானதல்ல.
சாதி ஒழிப்பில் அக்கறையற்று, ஆதிக்க சாதிகளில் ஒன்றாக தாங்களும் ஆனால் போதும் என்பதுதான் அவர்களின் இலக்காக உள்ளது. அதனால்தான், இந்து மதத்துடன் தங்களை அடையாளப்படுத்தும் விதமாக 'நாங்கள் தேவேந்திரனின் வழி வந்தவர்கள்' என்று கூற முடிகிறது. இந்துத்துவா கும்பலின் அருள் கடாட்சத்தைப் பெறுவதற்கு ஏதுவாக 'இடஒதுக்கீடு வேண்டாம்' என்றும் கூற ஆரம்பித்துவிட்டார்கள்.
பள்ளர் சாதி சகோதரர்கள் உணர வேண்டியது ஒன்று உண்டு - இந்து மதம் படிநிலைப்படுத்தப்பட்ட சாதி அடுக்கைக் கொண்டது. இந்த அடுக்கில் கீழே வேண்டுமானால் செல்லலாம், மேலே செல்ல முடியாது. அரசியல் சட்டம் ஏற்பளித்தாலும், இந்து சாதி சமூகம் ஏற்பளிக்காது. சாதி இழிவு நீங்க வேண்டுமானால், இந்து மதத்தை விட்டு வெளியேறுவதுதான் ஒரே வழி.

 இரா. முருகவேள் இந்து மதத்தில் சாதிகள் மேல் கீழாக மாறியே வந்துள்ளன என்று ரொமீலா தாப்பர் கூறுகிறார். சமீபத்திய உதாரணம் நாடார் சாதி. தேவேந்திர குல . . . சாதி தனது அந்தஸ்த்தை மாற்றிக் கொள்வதற்காக இந்த முயற்சியை எடுக்கிறது. ஒவ்வொரு குறிப்பிட்ட சாதியிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய செல்வந்தர்கள் இப்படித்தானே ஆதிக்கசாதியாவாதற்குச் சிந்திப்பார்கள் கீற்று நந்தன் முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: