சனி, 27 ஆகஸ்ட், 2016

சாய்பாபா நேரில் வந்ததாக பொதுமக்களிடம் பரபரப்பு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எம்.ஜி.ஆர் நகரில் சாய் பாபா கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு இன்று காலை முதியவர் ஒருவர் வந்துள்ளார். அவர் புகைப்படத்தில் உள்ள சாய் பாபாவைப் போல் அமர்ந்து மக்களுக்கு ஆசி வழங்க தொடங்கினார். உடனே அங்கிருந்தவர்கள் சாய் பாபாவே நேரில் வந்து ஆசி வழங்குவதாகச் சொல்ல, விஷயம் பரபரப்பாகி குமாரபாளையத்தில் உள்ள பக்தர்கள் கோயிலுக்கு படையெடுத்தனர். இதனால் கூட்டம் கூடியது. முதியவருக்கு மாலை போட்டு பூக்களால் அபிஷேகம் செய்தார்கள் மக்கள். அந்த முதியவரும் எல்லோருக்கும் ஆசி வழங்கினார். மக்களின் நம்பிக்கை இப்படியிருக்க, நீண்ட நேரத்திற்குப் பிறகு அந்த முதியவரே நான் சாய் பாபா அல்ல நானும் உங்களைப்போல் பாபா பக்தர்தான் எனக் கூறி விட்டு சென்றுள்ளார். --ஜீவாதங்கவேல்  nakkeeran.in

கருத்துகள் இல்லை: