சனி, 27 ஆகஸ்ட், 2016

தயாநிதி மாறன் சிபிஅய் நீதிமன்றத்தில் ஆஜார் ...



டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானபின்னர் தயாநிதிமாறன் செய்தியாளர்கள் சந்திப்பதை தவிர்ப்பதற்காக ஆட்டோவில் சென்றார். ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்த மாறன் சகோதரர்களில் தயாநிதிமாறன் வழக்கு விசாரணை முடிந்தபிறகு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தார். வழக்கமாக நீதிமன்றத்தில் இருந்து வெளியே செல்லும்போது சொகுசுகாரில் செல்லும் தயாநிதிமாறன், பத்திரிகையாளர்கள் சூழ்ந்திருப்பதை தெரிந்து கொண்டு, அவர்களின் கேள்விகளை தவிர்ப்பதற்காக அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றார். நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: