திங்கள், 2 மே, 2016

திருநாவுக்கரசர்: மாதம் ரூ.100 கோடி முதல் வருடத்திற்கு ரூ.1000 கோடிவரையில் சம்பாதிக்கவா ஒரு முதலமைச்சர் ?

நான் இல்லையென்றால் ஜெயலலிதாவை ஹைதராபாத்திற்கு பல பேர் பார்சல் செய்து அனுப்பி வைத்திருப்பார்கள். புதுக்கோட்டை மாவட்ட விராலிமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பழனியப்பனை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் இன்று பெருமநாட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார்.;’’கடந்த 5 ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது எப்பவாவது மக்களை சந்தித்துள்ளாரா? 5 ஆண்டுகளில் 5 முறைக்கூட மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை.  அவரை சட்டமன்ற உறுப்பினர்களோ, தமிழக அமைச் சர்களோ, அரசு அதிகாரிகளோ, மத்திய அமைச்சர் களோ யாரும் சந்திக்க முடியவில்லை
கடந்த காலத்தில் எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது அவர் பல முறை தமிழகத்தின் வளர்ச்சிக்காக பிரதமரையும் நிதி அமைச்சரையும் சந்தித்துள்ளார்.
ஆனால் ஜெயலலிதா இது வரைக்கும் ஒரு முறைக்கூட பிரதமரையோ,டெல்லி சென்று கேபினட் மந்திரிகளையோ சந்திக்க வில்லை.  அப்படி இருக்கையில் ஏன் தமிழகத்திற்கு இப்படி ஒரு முதலமைச்சர் தேவை. ஆண்டில் மக்கள் வரிபணத்தை கொள்ளையடிக்க மட்டும் ஒரு முதல்வர்.  சாராய ஆலை அதிபரிடம், கிராணைட் கம்பெணி முதலாளிகளிடம் மணல் கொள்ளையர்களிடமும் மட்டும் மாதமாதம் ரூ.100 கோடி முதல் வருடத்திற்கு ரூ.1000 கோடிவரையில் சம்பாதிக்கவா? ஒரு முதல்வர். ஜெயலலிதாவின் கூட்டத்தில் அவரின் பேச்சு மக்களை கவர்ந்து இழுப்பது இல்லை.  மக்களை பார்க்காத முதல்வர்,மக்களை அனுக முடியாத முதல்வர் நாட்டிற்கு எதற்காக தேவை

ஜெயலலிதா மூன்று முறை முதல்வராக இருந்துள்ளார்.  அது போது அடித்த கொள்ளையடித்தவர் மக்களை பார்க்கவில்லை.  மக்களை பார்க்காத முதல்வர் மக்களுக்கு தேவையில்லை.

கடந்த காலத்தில் நான் இல்லையென்றால் ஜெயலலிதாவை ஹைதராபாத்திற்கு பல பேர் பார்சல் செய்து அனுப்பி வைத்திருப்பார்கள். அப்போது நான் தான் புதுக்கோட்டையில் இருந்து அடியாட்களை கொண்டுபோய் வைத்து அவர் தமிழ்நாட்டு அரசியலில் நீடித்து நிற்க ஏற்பாடு செய்தவன்.  நியாயமாக பார்த்தால் பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தற்கு பதில் நான் தான் முதல்வராக இருந்திருக்க வேண்டும்’’ என்று பேசினார்.நக்கீரன்,in

கருத்துகள் இல்லை: