ஞாயிறு, 1 மே, 2016

பிகாரில் கண்ணைய குமாருக்கு பிரமாண்ட வரவேற்பு ...மோடி பக்தி தேச பக்தியாக்க முயற்சி.


Nitish Kumar government in Bihar rolled out the red carpet for JNU students' union leader Kanhaiya Kumar who is on his first visit to his home state after release from jail on charge of sedition
மோடி பக்தியைதான் தேச பக்தியாக ஆதிக்க சக்திகள் பார்கின்றன: கண்னையா குமார் குற்றச்சாட்டு
பாட்னா: மோடி பக்தியைதான் தேச பக்தியாக ஆதிக்க சக்திகள் பார்கின்றன என டெல்லி மாணவ தலைவர் கண்னையா குமார் குற்றம்சாட்டியுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கண்னையா குமார் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.  இந்தியாவில்
தாழ்த்தப்பட்டவர்களும், சிறுபான்மையினரும் வேட்டையாடப்படுவதாக அவர் கண்டனம் தெரிவித்தார். கன்னையா குமாரின் கூட்டத்தில் அவருக்கு எதிராக முழக்கம் எழுப்பியவர்களுக்கும் ஆதாரவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கைலப்பாக மாறியது. இதனால் அமளி ஏற்பட்ட நிலையில் எதிர்பாளர் ஒருவர் நையபுடைக்கப்பட்டார். ஆடைகள் கிழிந்த நிலையில் அவர் ஓடி உயிர் தப்பினார். முன்னதாக பாட்னா வந்த  கண்னையா குமாருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாநில அரசு சார்பில் ஐக்கிய ஜனதா தளத்தின் முக்கிய தலைவர் நிரஷ்குமார் வரவேற்றார். கண்னையா குமாரை கொல்ல விமானத்தில் முயற்சி நடந்தது என்ற செய்தியின் எதிரொலியாக பாட்னாவில் அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. பாட்னாவில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்த கன்னையா குமார் பொதுகூட்டம் ஒன்றிலும் உரையாற்றுகிறார். dinakaran.com

கருத்துகள் இல்லை: