திங்கள், 29 பிப்ரவரி, 2016

நாம் தமிழர் கட்சிக்கு மெழுகுவர்த்தி பொதுசின்னம்.....தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது

நாம் தமிழர் கட்சிக்கு பொதுச்சின்னம் ஒதுக்கீடு இயக்குநரும் நடிகருமான சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மெழுவர்த்தி சின்னத்தை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதற்கான உத்தரவை கடந்த 26ஆம் தேதி ஆணையம் பிறப்பித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி எனும் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சிக்கு பொதுச்சின்னமாக வழங்கப்படுகிறது; வேறு எந்த வேட்பாளருக்கும் இந்த சின்னத்தை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஒதுக்கிவிடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: