ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

மும்பை 14 குடும்ப உறவினர்களை கொன்றவர் தானும் தற்கொலை..Chartered Accountat kills 14 of his family, commits suicide


மும்பை :ஒருவர் தனது சொந்த குடும்ப உறுப்பினர்கள் 14 பேர்
உறங்கிக்கொண்டிருக்கும்போது, கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் மும்பை நகருக்கு அருகிலுள்ள தானேயில் இடம்பெற்றுள்ளது.;ஹஸ்னின் வரேக்கார் என்ற 35 வயதுடைய நபரே, இவ்வாறு தனது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்தார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கத்திக் குத்துக்குள்ளாகி உயிரிழந்தவர்களில் ஏழு பேர் சிறார்கள்.
வீடொன்றிலிருந்து பெண்ணொருவர் உதவிக்கோரி அலறும் சத்தம் கேட்ட அயலவர்கள், தம்மை அழைத்து தகவல் வழங்கினர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொலையாளின் சகோதரியான இந்தப் பெண் மட்டுமே உயிர் தப்பியுள்ளார்.
இவர்களை கொலை செய்தவதற்கு முன்னர் வீட்டின் அனைத்து கதவுகளையும் கொலையாளி மூடியிருந்தார் என்பதும் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உறவினர்களை கொலை செய்தததன் பின்னர், அந்த நபர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
சொத்து விவகாரமே இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் எனத் தாம் நம்புவதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.bbc.tamil.com

கருத்துகள் இல்லை: