வெள்ளி, 21 நவம்பர், 2014

உயர்நீதிமன்றத்தில் சகாயம்:மதுரை மாவட்டம் மட்டுமா..அனைத்து மாவட்டங்களுமா? கனிமவள முறைகேடு .....

கனிமவள முறைகேடு குறித்து மதுரை மாவட்டத்தில் மட்டும் விசாரிக்க வேண்டுமா? அல்லது தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் விசா ரணை நடத்த வேண்டுமா? என்று தெளிவுபடுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மனுதாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் சட்ட விரோதமாக பல கனிமவள குவாரிகள் செயல் படுகின்றன. பல்வேறு புகார்களின் அடிப்படையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன் தீப்சிங் பேடி தலைமையிலான விசாரணைக் குழு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கனிமவள குவாரிகளில் மட்டும் ஆய்வு மேற்கொண்டது.
இந்த நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் நடப்ப தாகக் கூறப்படும் கனிமவள முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இதுபோல, பசுமை தாயகம் செயலாளர் அருள் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளின் முறைகேடுகளை மட்டும் விசாரிப்பதற்காக சகாயம் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசின் தொழில் துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுப் பணித்துறை உதவியுடன் தனியார் நிறுவனங்கள் சட்ட விரோதமாக கனிம வளங்களை வெட்டி எடுத்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் ஆற்று மணல், செம்மண், கல் குவாரிகள், தாது மணல், கிரானைட் உள்ளிட்ட அனைத்து வகையான கனிம வள குவாரிகளில் நடக்கும் முறைகேடு கள் குறித்து சகாயம் குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நேற்று தாக்கல் செய் துள்ள மனுவில்,
‘‘கனிமவள முறைகேடுகள் குறித்து மதுரை மாவட்டத்தில் மட்டும் விசாரிக்க வேண்டுமா? அல்லது தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் விசாரணை நடத்த வேண்டுமா? என்று உயர்நீதி மன்றம் தெளிவுபடுத்த வேண்டும்” என்று கோரியுள்ளார்.tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: