செவ்வாய், 19 ஜூலை, 2011

ரஞ்சிதா வெளியே வந்தால் நித்யானந்தா, பிரேமானந்தா தான்: வழக்கறிஞர் ஸ்ரீதர்

Niththi  and  Ranji 
2010 மார்ச் முதல் வாரத்தில் வெளியான நித்யானந்தா நடிகை ரஞ்சிதா சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் பெரும் அதிர்வை உண்டாக்கின. இதையடுத்து நித்யானந்தா தலைமறைவானார். பின்னர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே உள்ள நித்யானந்தா கடந்த 13.07.2011 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய நித்யானந்தா நக்கீரன் உள்ளிட்ட சில ஊடகங்கள் வழக்கறிஞர் ஸ்ரீதர் மூலம் பணம் கேட்டு மிரட்டியதாக பொய் குற்றச்சாட்டை கூறினார்.

இதையடுத்து, 'நக்கீரன் வெளியிட்டது உண்மையான வீடியோ காட்சிகள்தான் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சட்டப்பூர்வமாகவும் இதனை நிரூபிப்போம். இந்த சவாலை எதிர்கொண்டு, தங்களின் பரிசுத்தத் தன்மையை நிரூபிக்க நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் தயாரா?' என்று நக்கீரன் கூறியிருந்தது.
இந்நிலையில் சென்னையில் 18.07.2011 அன்று செய்தியாளர்களை சந்தித்த நித்யானந்தாவின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர்,

இந்த சிடி விஷயம் பற்றி தெரிந்தது 5 பேர்தான். நித்யானந்தா, ரஞ்சிதா, லெனின் தர்மானந்தா, ஆர்த்திராவ். நித்யானந்தா என்னிடம் சொல்லும்போது, சிடி உண்மையானது என்றார். அப்போது அட்வைஸ் பண்ணினோம். உண்மையான சிடியாக இருந்தால் தாமதப்படுத்த வேண்டாம். கன்சல்டிங் பாட்னர் என்று சொல்லிவிட்டு கேஸில் இருந்து தப்பிக்க பாருங்க. அதைவிட்டுட்டு ரொம்ப டீப்பா போனீங்கன்னா டிரபுள் வரும். அதற்கேற்ற மாதிரி அவர் ஒத்துக்கிட்டார்.
இதையடுத்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் சிடியில் இருந்தது நான்தான் என்று ஒப்புக்கொண்டார். அந்த சிடியை பார்த்தால் நித்யானந்தா எழுந்து கையை நீட்டி அங்கபாரு என்று சொல்லும்போது, ரஞ்சிதா அதுவெல்லாம் ஒன்றும் இல்லை படு என்று சொல்லுகிற மாதிரி இருக்கும். அதை உன்னிப்பா கவனித்தால் தெரியும்.
அப்போது நான் வழக்கறிஞராக சொல்லிவிட்டேன். ரஞ்சிதாதான் எடுத்திருக்காங்க. ரஞ்சிதாவிடம் சரண் அடைவதுதான் பெஸ்ட். ரஞ்சிதாவுக்கு பணத்தை செட்டில் செய்த நித்யானந்தா, அந்த அட்வைஸை மட்டும் கரெக்டா செய்துவிட்டார்.

சிடி பொய்யானது என்றால் இருவரும் ஏன் நாட்டை விட்டே ஓட வேண்டும். தவறு செய்யாதவர்கள் இங்கேயே இருந்திருக்கலாமா. ரஞ்சிதா அமெரிக்கா போய்விட்டார். அமெரிக்கா போன ரஞ்சிதாவிடம் பணத்தை செட்டில் செய்து, இந்தியாவுக்கு வரவழைத்தார்கள்.
ரஞ்சிதாவை கூடவே வைத்துக்கொள்வதுதான் பாதுகாப்பானது என்று நான் மட்டும் அல்ல, நித்யானந்தா பார்த்த பல வழக்கறிஞர்களும் அவரிடம் சொன்னார்கள். அதனால் அதை மட்டும் கரெக்டா செய்துவிட்டார் நித்யானந்தா.
ரஞ்சிதா மட்டும் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்து, சிடியில் இருப்பது தானும், நித்யானந்தாவும் தான் என்று வாக்குமூலம் கொடுத்துவிட்டால் பிரேமானந்தாவாக, நித்யானந்தா ஆகிவிடுவார் என்றார்.

கருத்துகள் இல்லை: