வெள்ளி, 22 ஜூலை, 2011

முரளிதரன் போன்று உங்கள் பகுதியிலிருந்தும் வீரர்கள் உருவாகவேண்டும்: கிளிநொச்சியில் ஜனாதிபதி _

எமது கிரிக்கெட் அணியில் முத்தையா முரளிதரன் போன்று உங்கள் பகுதிகளிலிருந்து தர்மலிங்கம், ராஜலிங்கம், இதயராஜ் போன்ற தமிழ் இளைஞர்கள் விளையாட வேண்டும். அந்த கனவு நனவாக வேண்டும். அதுவே எனது நோக்கமாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது இன்றும் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உங்கள் உரிமைகள் உங்களிடமே இருக்க வேண்டும். அதனை யாராலும் பறிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ள சர்வதேச விளையாட்டரங்கின் நிர்மாண பணிகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இங்குள்ள இளைஞர்கள் 2018ஆம் ஆண்டு அம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ள பொதுநல வாய விளையாட்டுப்போட்டிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ரீசேட்களை அணிந்திருப்பதை காணமுடிகின்றது. இவற்றை பார்க்கும்போது எமக்கு நிச்சயமாக தங்கம், மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஜனாதிபதி இந்த நிகழ்வில் தமிழ்மொழியிலும் உரையாற்றினார். அதன்போது அவர் குறிப்பிடுகையில்,

உங்கள் மொழியில் பேசும்போது நான் மகிழ்ச்சியடைகிறேன். 30வருட காலமாக காணப்பட்ட இருண்டயுகம் இதன் பின்னர் இல்லை. நீங்கள் எதிர்கொண்ட துன்பங்கள், வேதனைகள் என்பவை எனக்கு நன்றாகவே தெரியும். தற்போது நீங்கள் அனைவரும் அச்சமின்றி சுதந்திரமாக வாழலாம். பாதுகாப்பாகவும் வாழலாம். ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது இன்றும் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உங்கள் உரிமைகள் உங்களிடமே இருக்க வேண்டும். அதனை யாராலும் பறிக்க முடியாது.

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் உங்கள் பிரதேசத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மென்மேலும் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். நாம் உங்கள் மாகாணத்திற்கு அதிகளவில் நிதி ஒதுக்கியுள்ளோம். உங்கள் பிரதேசங்களில் பாதிக்கப்பட்டுள்ள விதவை பெண்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க விசேட வேலைத்திட்டம் ஒன்றுமுன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் அவர்களுக்கு கௌரவமான வாழ்க்கையை கொண்டு செல்ல முடியும்.

உங்கள் பிள்ளைகளில் சிலர் இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நாம் நீதியை பெற்றுக்கொடுப்போம். மீள்குடியேற்ற செயற்பாடுகளை அதிகளவில் முடித்துவிட்டோம். உங்கள் பிரதேசம் 30 வருடங்கள் பின்னடைவை கண்ட பிரதேசமாகும். கடந்த இரண்டு வருடகாலத்துக்குள் நாங்கள் அனைத்து துறைகளிலும் அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளோம். அதனை யாராலும் இல்லையென்று கூற முடியாது. கடந்த மாதம் கொக்காவில் கோபுரத்தை திறந்துவைத்தோம்.

உங்கள் பிரதேசத்தில் விளையாட்டுத்துறை வேகமாக முன்னேற்றமடைய வேண்டும். எமது கிரிக்கெட் அணியில் முத்தையா முரளிதரன்போன்று உங்கள் பகுதிகளிலிருந்து தர்மலிங்கம், ராஜலிங்கம், இதயராஜ், போன்ற தமிழ் இளைஞர்கள் விளையாட வேண்டும். அந்த கனவு நனவாக வேண்டும். நாகலிங்கம், எதிர்வீரசிங்கம் போன்றோர் மீண்டும் உங்கள் பகுதிகளிலிருந்து வரவேண்டும். அதுவே எனது நோக்கமாகும்.

உறுதிகள் இல்லாத காணிகள் தொடர்பான பிரச்சினைகள் விரைவில் திறக்கப்படும். சிலர் உங்களை தவறான பாதையில் அழைத்துச்செல்ல முயற்சிக்கின்றனர். அவர்கள் அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக கோடிக்கணக்கில் நிதியை பெற்றுக்கொள்கின்றனர். அவற்றின் மூலம் அவர்கள் என்ன செய்தார்கள். அவர்களின் வீடுகள் வெளிநாடுகளில் உள்ளன. அனைத்து வசதிகளும் வெளிநாடுகளில் உள்ளன என்றா

கருத்துகள் இல்லை: