சனி, 23 ஜூலை, 2011

பிரான்ஸ் நாட்டு நீதவான் இலங்கையில் மரணம்

பிரான்ஸ் நாட்டு நீதவான் ஒருவர் தங்காலை கடலில் நீராடிக் கொண்டிருந்த சமயம் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி மரண மடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுற்றுலாவிற்காக இலங்கை வந்திருந்த மேற்படி நீதவான் கடலில் நீராடிக் கொண்டிருந்த சமயம் அலையில் அடித்துச் செல்லப்பட்டே இவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் கூறினர்.

மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் சுற்றுலாவுக்காக இலங்கை வந்திருந்த மேற்படி பிரான்ஸ் நாட்டு நீதவான் தன் குடும்பத்தாருடன் இணைந்து கடலில் நீராடிக் கொண்டிருந்த சமயத்திலேயே அலையினால் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: