புதன், 10 ஏப்ரல், 2019

இம்ரான் கான் : பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புண்டு

பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புண்டு- இம்ரான் கான்மாலைமலர் : பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இந்தியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த சிறந்த வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். கராச்சி: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளிநாட்டைச்  சேர்ந்த சில பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாராளுமன்ற தேர்தலில் அடுத்து அமையவுள்ள இந்திய அரசாங்கம் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இருந்தால், பாகிஸ்தானுடன் பேசுவதற்கு பயப்படலாம். பா.ஜ.க. ஒரு வலதுசாரிக் கட்சி - வெற்றி பெற்றால், காஷ்மீரில் சில வகையான தீர்வு கிடைக்கும். இந்தியாவில் இப்போது என்ன நடக்கிறது என்று நான் பார்க்க நினைத்தேன், முஸ்லிம்கள் தாக்கப்படுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு மகிழ்ச்சியாக இருந்த இந்திய முஸ்லிம்களை அவர் அறிந்திருந்தார், தீவிர ஹிந்து தேசியவாதத்தால் இப்போது கவலைப்படுகிறார். ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு நில உரிமைகளை உறுதி செய்யும் அரசியலமைப்பின் 35-வது பிரிவு அகற்றுவதற்கான பா.ஜ.க. வாக்குறுதி, ஒரு முக்கிய கவலையாக இருந்தது என்று கூறினார்

கருத்துகள் இல்லை: