வியாழன், 11 ஏப்ரல், 2019

பல தேர்தல்களில் தபால் வாக்குகள் ஏன் திமுகவுக்கே சாதகமாக இருக்கிறது?

கடந்த சட்டசபை தேர்தலில் அப்பாவு அவர்களின் தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணப்படாமலேயே அவர் தோற்றதாக அறிவிக்கப்பட்டது தெரிந்ததே. வழக்கு இன்னும் நடக்கிறது ..
Ravishankar Ayyakkannu : கேள்வி: தொடர்ந்து பல தேர்தல்களில் அரசு ஊழியர்கள் பதிவு செய்யும் தபால் வாக்குகள் திமுகவுக்குச் சாதகமாகவே உள்ளதே. இதை எப்படிப் புரிந்து கொள்வது?
பதில்:
பல கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்கள் தங்கள் CEOவுக்கு rating கொடுப்பார்கள்.
ஊழியர்களின் நம்பிக்கையைப் பெற முடியாத CEO இருந்தால் நிறுவனம் பாழாகும். விரைவில் சீட்டைக் கிழிப்பார்கள்.
அரசு அதிகாரிகள் யாரைக் கேட்டாலும்,
ஒவ்வொரு முறை திமுக ஆட்சிக்கு வந்தாலும் புதுப்புதுத் திட்டங்களாகப் போட்டுப் பணிச்சுமையைக் கூட்டுவார்கள்,
பழுத்த அனுபவம் உள்ள அமைச்சர்கள் ஆய்வுக்கு வந்தால் கை கால் உதறும் என்றே
கூறுவார்கள்.
இருந்தாலும், அரசாங்கம் என்னும் நிறுவனத்தில்
* போன ஆட்சிக்கு இந்த ஆட்சி எப்படி இருக்கிறது?
* யார் வந்தால் போராடத் தேவையின்றி தங்கள் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன?
* நன்கு படித்து திறமையுடன் பணியாற்றும் தங்களை ஆளத் தகுதி படைத்தவர்கள் யார்?
என்று அரசு எந்திரத்துடன் நேரடியாகப் பணியாற்றும் காரணத்தால் நன்கு மதிப்பிடும் வாய்ப்பு பெற்றவர்கள் அரசு ஊழியர்கள்.
அவர்களே திமுகவுக்குத் தொடர்ந்து வாக்களிறார்கள் என்றால்,
திமுக சிறந்த ஆட்சித் திறன் படைத்த கட்சி என்பது புலனாகிறது.

இது நமக்குப் புரிகிறதோ இல்லையோ,
கடந்த தேர்தலில் மூன்று தொகுதிகளில் தபால் வாக்குகளால் மட்டுமே வெற்றியை இழந்த அதிமுகவுக்கு நன்றாகவே புரிந்திருக்கிறது.
அதனால் தான் இந்த முறை மதுரையில் அரசு ஊழியர்கள் தங்கள் தபால் வாக்குகளை அதிமுக வேட்பாளர் முன்னிலையிலேயே பதிவு செய்ய வற்புறுத்தப்பட்டிருக்கிறார்களோ என்ற ஐயம் எழுகிகிறது!
(செய்தி இணைப்பு மறுமொழியில்)

கருத்துகள் இல்லை: