செவ்வாய், 6 ஜூன், 2017

எம்ஜியார் .கொடுத்ததும் கெடுத்ததும் ... அதிகம் வெளிவராத லிஸ்ட்...

தினகரன் அரசு : *வரலாறு...* புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வீட்டுக்கு சென்றவர்கள் யாரும் சாப்பிடாமல் வந்ததில்லை என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டிருந்த காலமது.
உண்மையில் எம்.ஜி.ஆரைப் பார்க்கப் போய் உணவுண்டு வந்தவர்களை விட காவலாளிகளிடம் உதைவாங்கி வந்தவர்களே அதிகம்.
*"மாண்புமிகு புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல், இதயக்கனி, டாக்டர் எம்.ஜி.ஆர்.”* என்று தற்புகழ்ச்சியில் மூழ்கித் திளைத்தார். அரசு கட்டிடங்களின் எல்லா கல்வெட்டுகளிலும் தன் பெயரே இருக்க வேண்டும் என்று வெறியோடு உத்திரவிட்டார். முகமன் பாடும் கூட்டத்துக்கு பொன்னும் பொருளும் கொடுத்து வள்ளலென்றும், நோபெல் பரிசுக்குரிய மேதை என்றும் புகழ வைத்தார். இதயம் பேசுகிறது மணியன், மக்கள் குரல் டி.ஆர்.ஆர்., சண்முகவேல், சோலை, வலம்புரிஜான் ஆகிய அவரது முகமன் பாடும் பத்திரிக்கை எடுபிடிகள் என்றால் பண்ருட்டி ராமச்சந்திரன், ரங்கச்சாரி, வி.பி.ராமன் ஆகியோர் அரசியல் ஆலோசகர்கள். மோகன்தாஸ் தலைமையில் ஒரு உளவுப்படை; தேவாரம் தலைமையில் ஒரு அதிரடிப்படை. இடி அமீனைச் சுற்றி ஒரு அல்லக்கைக் கூட்டம் அமைந்ததைப் போல இவர்கள் எம்.ஜி.ஆரைச் சுற்றியிருந்தனர். தனது எடுபிடிகளுக்கு அரசுச் சொத்துக்களை எம்.ஜி.ஆர். தானமாகக் கொடுத்தார்.
சென்னை மிருகக்காட்சி சாலை இருந்த இடத்தை பழனி பெரியசாமிக்கும், சென்னை வளசரவாக்கத்தின் புறம்போக்கை நடிகைகள் அம்பிகா-ராதாவுக்கும், போரூர் புறம்போக்கை சாராய மன்னர் உடையாருக்கும், மருவத்தூர் ஏரி புறம்போக்கை பங்காரு அடிகளாருக்கும் எழுதிக் கொடுத்தார். முனு ஆதி, லியாகத் அலிகான், மா.பொ.சி., அங்கமுத்து, உக்கம் சந்து, பழக்கடை பாண்டியன், கோடம்பாக்கம் குமார், சுலோச்சனா சம்பத், கல்யாணி ராமசாமி, அனகாபுத்தூர் ராமலிங்கம், பால குருவ ரெட்டியார் இப்படி ஒரு பெரிய ஒட்டுண்ணிக் கூட்டத்தை வாரியங்கள், அரசு நிறுவனங்களின் தலைவர்களாக்கி அரசாங்கப் பணத்தைச் சுருட்டிக்கொள்ள ஏற்பாடு செய்தார்.


 ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, கோவை முதலாளி வரதராஜுலு போன்ற அரசியல் வாடையே இல்லாதவர்களுக்கும் பதவிகளைத் தானம் செய்தார். *மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன்*

தொமுச. இராசேந்திரன். செய்யாறு தமிழகம் அழிவுக்கு காரணமே இந்த ஆளுதான்... இவரது 13 ஆண்டு ஆட்சியில இவர் பெயர் சொல்லும் திட்டம் ஏதேனும் உண்டா.? ஏதும் இல்லை என்பதே பதில்..

கருத்துகள் இல்லை: