புதன், 7 ஜூன், 2017

இந்தக் கோவிலில் சூத்திரர்கள் உள்ளே வர அனுமதியில்லை" உத்தரபிரதேச கோவில்களில் புதிய சட்டம் ..

prakash.jp உத்தரபிரதேச ஹிந்து கோவில்களில் புதிய வாசகங்கள் ‘‘சூத்திரர்களே, உள்ளே வராதீர்கள்!’’...
அதாவது "ஹிந்து" மதத்தில் 65% சதவீதம் இருக்கும் பிற்படுத்தப்பட்ட / மிக பிற்படுத்தப்பட்ட மக்கள், இந்து கோயிலுக்குள் வரவேண்டாம் என சொல்கிறார்கள்.. இதுதான் பிஜேபி RSS கும்பலின் ஹிந்துத்துவா வர்ணாசிர மனு தர்மம்..
"சாதுக்கள் எழுந்தருளியுள்ள இந்தக் கோவிலில் சூத்திரர்கள் உள்ளே வர அனுமதியில்லை", என்று எழுதி கீழே, "விதிகளை கடைபிடித்து எங்களுடன் ஒத்துழையுங்கள்" என்றும் எழுதியுள்ளனர்.
வாரணாசி, அலகாபாத், கன்னோஜ், மதுரா போன்ற நகரங்களில் உள்ள கோவில்களின் முன்பு இது போன்று புதிதாக தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது.

கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் அரசு இந்திய நிர்வாகத்தை கையிலெடுத்த பிறகு அழிக்கப்பட்ட இந்த வாசகங்கள், 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எழுதப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி, அலகாபாத் போன்ற இடங்கள் இந்தியா முழுவதும் அதிக அளவு ஆன்மீக சுற்றுலாப் பயணிகள் வரும் இடங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சரி, சூத்திரர்கள் என்பவர்கள் யார்??
இங்கே பெரும்பாலோனோர் தாழ்த்தப்பட்டவர்களை, "சூத்திரர்கள்" என்று தவறாக கருதிக்கொண்டு இருக்கிறார்கள்.. ஆனால், உண்மையில் தாழ்த்தப்பட்டவர்கள், தலித் போன்றோர் சூத்திரர்கள் அல்ல... இவர்கள் எந்த மனுதர்ம நால்வகை வர்ணத்தின் கீழும் இல்லை... தாழ்த்தப்பட்டவர்கள், "பஞ்சமர்" என்னும் பிரிவின்கீழ் வருகிறார்கள்....
அப்படி என்றால், சூத்திரர்கள் என்ற பிரிவின் கீழ் யார் வருகின்றவர்கள் ???? இங்கே ஆண்ட சாதி, மேல் சாதி இந்துக்கள் என்று சொல்லிகொள்பவர்கள்தான்.....
தமிழகத்தில் சத்திரியர், வைசியர் போன்ற வர்ண பிரிவுகள் கிடையாது......வட நாட்டில் தான் முற்படுத்தபட்ட வகுப்பினை சார்ந்த ராஜ்புத், காயஸ்த்ர் போன்றோர் சத்திரியர் என்ற வர்ணத்தின் கீழும், படேல் போன்றோர் வைசியர் என்ற வர்ணத்தின் கீழும் இருகிறார்கள்.. இவர்கள் எல்லாம் முற்படுத்தபட்ட வகுப்பினை சார்ந்தவர்கள்.... பூணூல் போடுபவர்கள், இட ஒதுக்கீடு பெறாதவர்கள்....... தென்இந்தியாவில் இருக்கும் வர்ணங்கள் இரண்டு... அதில், ஒன்று பிராமன வர்ணம், மற்றவர்கள் எல்லாம் சூத்திரர்கள் என்ற வர்ணம் தான்....
இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பார்ப்பன, ஷத்திரிய, வைசிய என மூவர்ணத்திற்கும் பூநூல் உண்டு.. தமிழகத்தில் பார்ப்பனரை தவிர மற்றவர்களுக்கு பூநூல் இல்லாத காரணம், மற்ற அனைவரும் சூத்திரர்களே.. 1900 ஆண்டு துவக்கத்தில் , இங்குள்ள பல இடைநிலை சாதிகள், தங்கள் நிலையை, வர்ண அடுக்கில் உயர்த்த "சத்திரியர்", "வைசியர்" என்று சொல்லிக்கொள்ள ஆரம்பித்தனர்... இந்த சூத்திர சிகாமணிகள் தான் "நாங்கள்லாம் ஷத்திரியர்கள், வைசியர்கள் என காமடி பண்ணிக்கொண்டுள்ளனர்..

கருத்துகள் இல்லை: