திங்கள், 5 ஜூன், 2017

தேடப்படும் விஜய் மல்லியா இந்தியா பாகிஸ்தான் கிரிகெட் போட்டியை பர்மிங்காம் ...

Vijay Mallya Enjoys India-Pak Clash at Birmingham
பர்மிங்காம்: இந்தியாவால் தேடப்படும் விஜய்மல்லையா பர்மிங்காமில் நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் இடையேயான ஐசிசி சாம்பியன் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்து இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்திய வங்கிகளிடம் இருந்து ரூ9,000 கோடி கடனை வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் இந்திய நீதிமன்றங்களால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்த இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இந்தியாவைப் பற்றியும் இந்திய ஊடகங்களையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் விஜய்மல்லையா.

இந்நிலையில் பர்மிங்காமில் இன்று நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் போட்டி பார்க்க விஜய் மல்லையாவும் வந்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் விஐபி கேலரியில் விஜய் மல்லையா அமர்ந்து போட்டியை பார்த்திருப்பது புதிய சர்ச்சையையும் கிளப்பியுள்ளது  tamiloneindia

கருத்துகள் இல்லை: