திங்கள், 5 செப்டம்பர், 2016

கொலக்கார ஆண்களா.. என்னதான்டா செய்யச் சொல்றீங்க பெண்களை?

மதிமாறன் :  காதலித்தால் ‘அப்பன் ஆம்பள’ வெட்டுறான். காதலிக்காவிடில் ‘ரவுடி ஆம்பள’ வெட்டுறான்.
அட கொலக்கார ஆண்களா.. என்னதான்டா செய்யச் சொல்றீங்க பெண்களை?
1 September
‘பெண்களுக்கு எதிரான ஈவ்டீசிங் போன்ற லீலைகளே கடவுளுக்கான அழகு. அதுதான் பெண்களை மயக்கும் வழி’ என்ற புராண, இதிகாச வழியாகச் சொல்லப்பட்ட ஆணாதிக்கக் கலை, இலக்கியங்களின் தொடர்ச்சியாகதான்;
கண்ணனின், முருகனின் வாரிசுகளாக எம்.ஜீ.ஆர், சிவாஜி – ரஜினி, கமல், – விஜய் , அஜித் – தனுஷ், சிம்பு என்று ஈவ்டீசிங் செய்து நாயகிகளை ‘மயக்கி’ கடவுள்களைப் போல் இளைஞர்களுக்கு வழி காட்டுகிறார்கள்.
2 September
‘மரியாதையா என்னை லவ் பண்ணு.. இல்ல தலையில கல்லைப் போட்டுக் கொன்னுடுவேன்.’ என்று மிரட்டிய ‘சேது’ பாலாவை விட,
காதலிக்க மறுத்தபோதும், பெண்ணின் நினைவுகளில் தாடி வளர்த்து அவளுக்காகத் தன் உயிரை தியாகம் செய்த ‘ஒரு தலை ராகம்’ டி. ராஜேந்தர் ஆயிரம் மடங்கு முற்போக்கானவர்.⁠⁠⁠⁠

2 September
‘என்ன மச்சான் உன் ஆளு ஏமாத்திட்டு போயிட்டாளா.. தேவதாஸ் மாதிரி ஆயிட்டே?’
இதுபோன்ற உரையாடல்களை இன்றைய இளைஞர்கள் மத்தியில் கேட்க முடிவதில்லை.
1953 ல் வெளியான ‘தேவதாஸ்’ திரைப்படம், தாத்தா, அப்பா, பேரன் என்று மூன்று தலைமுறை காதலன்களிடம் செல்வாக்குச் செலுத்தியது.
‘சூழல் காரணமாக வேறொருவரை திருமணம் செய்து கொண்ட,
தன் காதலியை நினைத்து நினைத்துத் தன்னை வருத்திக் கொள்கிறவன் தான் உண்மையான காதலன்’ என்கிற உணர்வை ஒவ்வொரு ஆணிடமும் அது ஏற்படுத்தியிருந்தது.
காதலியின் உன்னதத்தை உணர்த்திய சரத் சந்திர சாட்டர்ஜியின் கதை.
சுப்பராமனிடம் உதவியாளராக இருந்த எனது அருமை மெல்லிசை மன்னர் இசையமைத்த முதல் பாடல் ‘உலகே மாயம்.. வாழ்வே மாயம்’. உடுமலை நாராயணக்கவி எழுதியது.
காதல் தோல்வியடைந்த காதலன்களின் ஓரே தோழன் அந்தப் பாடல். ‘இன்னா மச்சான் உலகே மாயம்.. வாழ்வே மாயமா..?’ காதல் தோல்வியின் குறியீடு.
காதலியை மதிக்க, அவள் நெருக்கடியை புரிந்துகொள்ள கற்றுத் தந்த ‘தேவதாஸ்’ படத்தைப் பிரபல நடிகரை வைத்து திரும்ப எடுத்து ரீலிஸ் பண்ணுங்கய்யா.

கருத்துகள் இல்லை: