சனி, 13 ஆகஸ்ட், 2016

சற்குண பாண்டியன் காலமானார்.. திமுக துணை பொது செயலாளர்.. முன்னாள் அமைச்சர்

சென்னை : திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் சென்னையில் காலமானார். உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அதிகாலை 3.30 மணிக்கு ராயபுரம் வீட்டில் உயிர் பிரிந்தது.  
இவர் சமூகநலத்துறை அமைச்சராக 1996 தேர்தலுக்குப் பின்[ அமைந்த புதிய அரசில் இருந்தார். இவர் தி.மு.க. சார்பில் தமிழ சட்டமன்றத்துக்கு இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் இருந்து 1989, மற்றும் 1996 ஆண்டு தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார் இவரின் மருமகள்தான் சென்ற தேர்தலில்   அதே (ராதாகிருஷ்ணன் ) ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளராக களம்  இறங்கிய சிம்லா முத்துசெழியனாகும். 

கருத்துகள் இல்லை: