வியாழன், 11 ஆகஸ்ட், 2016

சென்னை சைதாப்பேட்டையில் நீதிபதி வீட்டில் 200 சவரன் நகைகள் கொள்ளை

இன்று காலையில் சென்னை நகைக்கடையொன்றில் 60 பவுன் நகை கொள்ளை போனது. இந்தச் சம்பவம் நடந்த சிலமணி நேரங்களிலேயே சென்னையில் சைதாப்பேட்டையில் கூடுதல் நீதிபதி வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 200 சவரன் நகைகள் திருட்டுப்போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சைதாபேட்டையில் நீதிபதிகள் குடியிருப்பில் நீதிபதி ஸ்ரீஜா சுப்பிரமணியன் வசித்து வருகிறார். இவர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், ஸ்ரீஜா வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் வீட்டின் பீரோவில் இருந்த 200 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுபற்றி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதையொட்டி, கோட்டூர்புரம் காவல்நிலையப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் கொள்ளை, கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுக்க சமீபத்தில் காவல் துறையினருக்கு மிதிவண்டி மற்றும் பைக் வழங்கியது நினைவிருக்கலாம்!  maalaiமலர்..கம

கருத்துகள் இல்லை: