ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

சசிகலா புஷ்பா : அடுத்த நடவடிக்கை பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை ....? கட்சிகளிடம் இருந்து அழைப்புகள்.....

முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையிலும் கூட சற்றும் கலங்காமல் படு தில்லாகத்தான் இருக்கிறாராம் சசிகலா புஷ்பா. அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து அவர் தீவிர ஆலோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா என்னை அறைந்தார். சசிகலா என்னை மிரட்டினார் என்று கூறி நாட்டையே அதிர வைத்தவர் சசிகலா புஷ்பா. தற்போது அதிமுகவை விட்டு நீக்கப்பட்டு விட்டாலும் கூட எம்.பியாக வலம் வருகிறார்.
முதல்வர் ஜெயலலிதா மீது டெல்லி போலீஸில் புகார் கொடுத்துள்ள சசிகலா புஷ்பா, நிறுத்தி நிதானமாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறாராம்
 அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு விட்டதால் இத்தனை காலமாக சசிகலா புஷ்பாவுக்கு பக்க பலமாக இருந்த பல முக்கியப் புள்ளிகள் விலகி விட்டனராம். ஆனாலும் சசிகலா புஷ்பா கலங்கவில்லையாம்.   முன்பை விட இப்போது தெளிவாகி விட்டாராம். தைரியமாக இருக்கிறாராம். நிதானமாக யோசிக்கிறாராம். தன்னிடம் தொடர்ந்து விசுவாசமாக இருக்கும் ஒரு சில நண்பர்கள், குடும்பத்தார், உறவினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளாராம்.

 சசிகலா புஷ்பாவுக்கு எந்தக் கட்சி சரிப்பட்டு வரும் என்று இவர்கள் விதம் விதமாக ஆலோசனை கொடுத்து வருகிறார்களாம். ஆனால் எதுவும் சசிகலா புஷ்பா மனதைத் தொடும் வகையில் இல்லையாம்.ஒரு ஐடியாவும் மனதைத் தொடும் வகையில் இல்லாததால் தானே தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து யோசித்துக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

அதேசமயம், பாஜக தலைவர்களில் சிலர், சசிகலா புஷ்பா இங்கு வந்தால் நன்றாக இருக்கும். அதை வைத்து கட்சியில் கொஞ்சம் பரபரப்பையும் கூட்டலாம், கலகலப்பையும் காட்டலாம் என்ற நப்பாசையில் உள்ளனராம்

Read more at: //tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: