திங்கள், 21 மார்ச், 2016

சாதியும் தமிழ் சினிமாவும்: அவசியம் பார்க்க வேண்டிய ஆவணப்படம்!

சாதியை போற்றி வளர்த்து தமிழத்தை நாசமாக்கியத்தில்  தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய  பங்களிப்பு உண்டு. சினிமாவின் சாதி வளர்ந்த வரலாற்றை ஆவணப்படுத்தியிருக்கிறது இந்த முயற்சி. Shah Jahan ; தமிழ்த் திரைப்படங்கள் சாதியை எவ்வாறு சித்திரித்தன. தாழ்த்தப்பட்டவர்களை திரைப்படங்கள் எவ்வாறு சித்திரித்தன. சாதி உணர்வு இல்லாதவர்களாக இருந்தவர்களையும் தமது சாதி குறித்துப் பெருமை உணர்வு கொண்டவர்களாக ஆக்குவதில் திரைப்படங்களின் பங்கு என்ன? இன்றைய பிரச்சினைக்கு முக்கியக்காரணங்களில் முதன்மையான காரணமாக சினிமாவை நான் கருதுவேன்.
www.facebook.com/meena.somu.1 தமிழ் சினிமாவில் சாதி…
இந்த ஆவணப்படம் முகத்தில் அறையும் உண்மைகளை சொல்கிறது. என்னை அம்பேத்கர் பற்றிய உரை நிகழ்த்த அனைத்திந்திய வானொலி நிலையத்திற்கு அழைத்திருந்தார்கள். எனக்கு AIR யின் விதிகளாக சொல்லப்பட்டது, எந்த சாதியையும் மதத்தையும் புண்படுத்தாமல் பேச வேண்டும் என்றும் சாதி பெயர்களை குறிப்பிட கூடாது எனவும். தலித் என்பது அரசியல் குறியீடு தான். ஆனாலும் ஒடுக்கப்பட்டவர்கள் என்று பேசினேன். பார்ப்பனியம் என்ற வார்த்தையை சேர்க்காமல் அம்பேத்கரை எப்படி பேச என சந்தேகம் வந்தது. பார்ப்பனியம் என்பது சாதியல்ல பார்ப்பனியம் என்பது சாதிய மனநிலை. ஆனால் இதை யெல்லாம் விளக்க முடியுமா? ஒத்துக்கொண்டேன். ஏனென்றால் அம்பேத்கரை அனைவருக்குமான அம்பேத்கராக பேச வாய்ப்பு என்பதால்.
அம்பேத்கரை பேச எவ்வளவோ இருக்கிறது, அந்த வார்த்தைகளை உபயோகிக்காமலே அவரின் சாரத்தை சொல்ல முடிந்தது. அது ஏன் என எனக்கு அப்போது கொஞ்சம் புரிந்தது, இந்த ஆவணப்படத்தில் இயக்குனர் ஜகன்னாதன் அவர்கள் சென்சார் போர்ட் குறித்து இதே போன்ற குற்றச்சாட்டை வைக்க, சென்சார் போர்டின் அதிகாரி கொடுக்கும் விளக்கம் ஓரளவு அதை தெளிவுபடுத்தியது.
சினிமாவும் சரி ஊடகங்களும் சரி… இந்த நாட்டில் மக்களை எழுச்சி அடையாமல் பார்த்துக்கொள்ளும் ” செஃப்டி வால்வ் ” என புரிந்தது. அதைவிட சமூகத்தின் விஷமான சாதிய உணர்வை செருக்காக மாற்றவும் தமிழ் சினிமா தொடர்ந்து பங்காற்றுகிறது  ://thetimestamil.com/

கருத்துகள் இல்லை: