சனி, 15 நவம்பர், 2014

ஆர்.எஸ்.எஸ் சின் தமிழ் உணர்வும் மணியரசனின் தலித் உணர்வும்? ராஜேந்திர சோழனே பார்ப்பன அடியாள்தான்!

images
16-11-2014 தேதியிட்ட ஜூனியர் விகடனில் ராஜேந்திர சோழனுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு விழா எடுத்ததைக் குறித்து, பெ. மணியரசன் அவர்கள்:
“சில ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அம்பேத்கர் விழாவைக் கொண்டாடினார்கள். ஆனால், இவர்களின் பல்வேறு கோட்பாடுகளைக் கடுமையாக எதிர்த்தவர் அம்பேத்கர். பிறகு எப்படி அவர்கள் அம்பேத்கரை கொண்டாடுகிறார்கள்? அதாவது அவரின் விழாவைக் கொண்டாடி தங்களுக்கு பெருமை தேடிக் கொண்டார்கள்.
ராஜேந்திர சோழனுக்கு விழா எடுக்கும் இவர்கள் தமிழ்மொழியை வழிபாட்டு மொழியாக அறிவிக்க போராடுவார்களா?” என்று கேட்டு இருக்கிறார்.
ஒரு அம்பேத்கரிஸ்ட்டை போல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை குற்றம் சாட்டுவது இருக்கட்டும். இவரே சில ஆண்டுகளுக்கு முன் ஆர்.எஸ்.எஸ் சின் அவதூறை நியாயப்படுத்துவது போல், ‘அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார். அதனால் அவர் இந்துத்துவ ஆதரவாளர்’ என்று அவதூறு செய்தவர் தானே.
அப்படியிருக்க இப்போது மட்டும் எப்படி டாக்டர் அம்பேத்கர் இந்துத்துவ எதிர்ப்பாளராக தெரிகிறார்?

‘ராஜேந்திர சோழனுக்கு விழா எடுக்கும் இவர்கள் தமிழ்மொழியை வழிபாட்டு மொழியாக அறிவிக்க போராடுவார்களா?’ என்று ஆர்.எஸ்.எஸ் சை பார்த்து கேட்கிறார்.
தமிழை வழிபாட்டு மொழியாக ‘தமிழ்’ மன்னன் ராஜேந்திர சோழனே தன் ஆட்சியில் செய்யவில்லை. அப்படியிருக்க ஆர்.எஸ்.எஸ் இடம் அதை எதிர்ப்பார்ப்பது என்ன நியாயம்?
ஆக, ராஜேந்திர சோழனை தமிழ் அடையாளமாக பார்க்க முடியாது. அவன் சமஸ்கிருத உயர்வை போற்றிய பார்ப்பன அடியாள். அவனை ஆதரிக்கிறவர்கள் நியாயமாக ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்து விழா கொண்டாடுவதுதான் நாணயமானது.  mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை: