ஞாயிறு, 9 நவம்பர், 2014

சாருநிவேதா :ரஜினி தமிழக பாஜகவுக்கு தலைமை ஏற்க வேணுமாம்! மக்களை காப்பாத்த இது ஒன்னுதாய்ன் வழியாம்? ஒரு சொம்பின் ஆசைகள்?

ரஜினிகாந்துக்கு ஒரு கடிதம்: பின்வரும் கடிதம் புதிய தலைமுறை இதழில் வெளிவந்தது.  இந்தக் கடிதத்தை எழுதிய போது ரஜினிகாந்த் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதியிருக்கவில்லை.  இன்றைய நிலையில் சூழல் மாறியிருக்கிறது.  ரஜினி பாஜகவில் சேரப் போவதில்லை என்றும் புதிய கட்சி ஆரம்பிப்பதற்கான சாத்தியங்களே அதிகம் இருக்கின்றன என்றும் தெரிய வருகிறது.  அப்படி ஆரம்பித்தால் அது தமிழ்நாட்டுக்கு நல்லது. ராமச்சந்திர குஹா சொல்வது போல் இந்தியாவுக்கு நல்ல முதலமைச்சர்களே தேவை.
அன்புள்ள திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு,
வணக்கம்.  நான் சாரு நிவேதிதா.  இந்தக் கடிதத்தின் மூலம் தமிழ் பேசும் மக்களிடமிருந்து நான் உங்களுக்கு ஒரு செய்தி கொண்டு வந்திருக்கிறேன்.  புகழின் உச்சியில் இருப்பவர்களுக்கு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நேரடியாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கம்மி.  ஊடகங்கள் மற்றும் நண்பர்கள் மூலம்தான் அறிய முடியும்.  நானோ அந்த இரண்டு பிரிவிலும் வர மாட்டேன்.  இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பலம் வாய்ந்த ஊடகங்களை விட சரியான முறையில் அடியேன் சொல்லி வந்திருக்கிறேன்.அடங்கொப்பரான ? சொம்புக்கு லொள்ளு எகிறுது.காவிரி வீரன் பெரியாறு சூரன் ரஜினிதாய்ன் நமக்கு எல்லாமேன்னு பார்பன சாருநிவேதா துடிப்பது வரலாற்று தவறுகளின் தொடர்ச்சியே! பாப்பாத்தி இருந்த இடத்தில அரைப்பானானாலும் பரவாயில்லை அவரை சுத்திதான் சேஷாத்ரி குடும்பம் உள்ளதே .அதுபோதும் சாருவுக்கு.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு முப்பது இடங்கள் கிடைப்பதே அதிகம் என்று துக்ளக்கில் நான் எழுதி வந்த தொடரில் எழுதினேன்.  அதைப் போலவே நடந்தது.  இந்த பாராளுமன்றத் தேர்தலிலும் பாஜக கூட்டணி 300 இடங்களையும் காங்கிரஸ் ஐம்பதுக்கும் குறைவான இடங்களையும் பெறும் என்று தினமலரிலும் இன்னும் பல பத்திரிகைகளிலும் எழுதினேன்.  இந்தக் கணிப்பு பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நண்பர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது.  ஆனால் அடியேன் சொன்னது போலவே நடந்தது.
இப்படி சரியாக கணிக்க முடிந்ததற்குக் காரணம், எனக்கு வாகனம் ஓட்டத் தெரியாது.  அதனால் எந்நேரமும் ஆட்டோவில்தான் சவாரி.  ஆட்டோக்காரர்கள் மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிப்பவர்கள்.
அதிமுக தலைவர் ஜெயலலிதா வருவாய்க்கு மீறி சொத்து சேர்த்த வழக்கில் சிறைத் தண்டனை பெற்று முதல்வர் பதவியை இழந்துள்ள இப்போதைய சூழலில் மக்களின் எண்ண ஓட்டம் என்ன என்பது பற்றிய ஒரு முக்கியமான செய்தியை உங்களிடம் தெரிவிக்கவே இந்தக் கடிதம்.  திமுக, அதிமுக இரண்டுமே போதும், வேறு ஒரு நல்ல தலைவர் தமிழகத்தை ஆள வேண்டும் என்பதுதான் மக்களின் இப்போதைய கருத்து.   இந்த இரண்டு கட்சிகளையும் விட்டால் வேறு என்ன மாற்று இருக்கிறது?  கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் நடந்த விஷயங்களை மக்கள் மறக்கவில்லை.  வைகோ, திருமாவளவன், ராமதாஸ், விஜயகாந்த் போன்றவர்களை மக்கள் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நினைக்கவில்லை.  எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கிடைப்பது பாஜக தான்.  ஆனால் வட இந்தியாவில் ஏகப்பட்ட பெரும் தலைவர்களைக் கொண்ட அந்தக் கட்சியில் தமிழகத்தில் மக்கள் நன்கு அறிந்த ஒரு தலைவர் கூட இல்லை.  ஆனால் சமூகத்தில் பெருவாரியான எண்ணிக்கையில் உள்ள கீழ்த்தட்டு வகுப்பினருக்கு ஒரு தலைவர் தேவை.  அதுதான் அவர்கள் அறிந்த அரசியல்.
எனவே தமிழகத்தில் பாஜகவுக்குத் தலைமை ஏற்று வரும் சட்டமன்றத் தேர்தலை நீங்கள் சந்தித்தால் தமிழக அரசியலில் இதுவரை இல்லாத ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
பொதுவாக எல்லா புத்திஜீவிகளையும் எழுத்தாளர்களையும் போலவே நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்பதே என் கருத்தாகவும் இருந்தது.  ஒரு டாக்டர், எஞ்சினியர், டீக்கடைத் தொழிலாளி, ஆசிரியர் என்று சமூகத்தின் எல்லாத் தரப்பினரும் அரசியலுக்கு வரலாம் என்கிற போது நடிகர்கள் மட்டும் ஏன் வரக் கூடாது என்று சிலர் கேட்கலாம்.  ஏனென்றால், நடிகர்களுக்கு மட்டுமே அவர்களின் நிஜத் தோற்றத்தை விட பல்லாயிரம் மடங்கு பெரிதான பிம்பம் (இமேஜ்) உருவாகிறது.  ஒரு சினிமா ஹீரோவை  மக்கள் முதல்வன் படத்தில் வரும் அர்ஜுன் மாதிரிதான் நினைக்கிறார்கள்.  அந்த ஹீரோ மிகப் பெரிய சமூக மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று நம்புகிறார்கள்.  ஆனால் சினிமாவும் நிஜ வாழ்க்கையும் ஒன்று அல்லவே?  எனவே நிஜத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒரு பிம்பத்தின் மூலம் கிடைக்கும் புகழை அடித்தளமாக வைத்து மக்களின் நிஜ வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய சவாலை முன்வைக்கும் அரசியலுக்கு நடிகர்கள் வருவது சரியல்ல என்பது என்னைப் போன்ற எழுத்தாளர்களின் கருத்து.   அதனாலேயே நீங்கள் அரசியலில் நுழைவதற்குப் பல சந்தர்ப்பங்கள் அமைந்த தருணத்திலும் அதில் ஈடுபடாமல் அமைதி காத்தது பற்றிப் பாராட்டி உங்களின் சமீபத்திய பிறந்த நாள் அன்று தி இந்து தமிழ் இதழில் எழுதியிருந்தேன்.
ஆனால் தமிழகம் இப்போது சந்தித்துள்ள சூழ்நிலை மிகவும் அபூர்வமானது.  ஜெயலலிதா இப்போதைக்கு முதல்வர் பதவியில் நீடிக்க முடியாது; மக்களுக்கு திமுகவும் பிடிக்கவில்லை என்ற நிலையில் தமிழக அரசியலில் இதுவரை இல்லாத ஒரு வெற்றிடம்  உருவாகியுள்ளது.  இதைப் போக்குவதற்கு தமிழகத்தில் உங்களை விட்டால் வேறு யாரும் இல்லை.  இந்த ஒரே காரணத்தினால்தான் உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறேன்.  நீங்கள் தனிமை விரும்பி.  ஆன்மீக நாட்டம் உள்ளவர்.  இந்த மனநிலைக்கு அரசியல் ஒத்து வராது.  தெரியும்.  இருந்தாலும் இந்த எட்டு கோடி மக்களுக்காக ஒரு ஐந்து வருடம் ஆட்சிப் பொறுப்பில் இருந்து பாருங்கள்.  அதற்குள் பாஜகவில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் உருவாகி விடுவார்கள்.  நீங்கள் திரும்பவும் இமயமலைக்குப் போய் விடலாம்.  பாஜகவில் ஆயுள் உள்ள வரை ஒரே தலைவர் என்ற திராவிடக் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிப் பாரம்பரியம் கிடையாது.  மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மந்திரி சபையிலும் கட்சித் தலைவர் பொறுப்பிலும் இல்லை என்பதிலிருந்தே இதை நாம் அறியலாம்.  எனவே வாழ்நாள் பூராவும் முதல்வர் என்ற முள் கிரீடத்தை நீங்கள் சுமக்க வேண்டிய கட்டாயம் பாஜகவில் இருக்காது.   
இந்தியாவில் இன்று 35 வயதுக்கு உட்பட்டவர்களிடம் ஊழலுக்கு எதிரான ஒரு தீவிரமான மனோபாவம் உருவாகியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.  அன்னா ஹஸாரேவுக்குக் கிடைத்த பிரம்மாண்டமான ஆதரவே அதற்கு சாட்சி.  ஆனால் அந்த ஆதரவை வைத்து மக்களுக்குத் தொண்டு செய்வதற்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டார் அர்விந்த் கெஜ்ரிவால்.  அதையும் நீங்கள் அறிவீர்கள்.  ஊழலுக்கு எதிராக இந்திய அளவில் திரண்டுள்ள கோபம் தான் நரேந்திர மோடிக்கு வாக்குகளாக மாறியதும் உங்களுக்குத் தெரியும்.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் எதிர்காலம் என்ன ஆகும் என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது.  காமராஜர், கக்கன், ராஜாஜி போன்ற தன்னலம் கருதாத தலைவர் ஒருவர் தேவை.  உங்களை மக்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள்.  உங்களுடைய நட்பு வட்டத்தைச் சேர்ந்த ஒருவர் எனக்கும் நண்பர்.  அவர் மூலம் நான் தெரிந்து கொண்டது உங்கள் எளிமையும் அடக்கமும்.  உங்கள் அளவுக்கு புகழின் உச்சிக்குச் சென்றவர்களிடம் இந்த இரண்டு பண்புகளும் காண்பதற்கு அரிதாக உள்ளது.  சமீபத்தில் ஒரே படத்தின் மூலம் புகழ் என்ற ஏணியில் ரொம்ப தூரம் ஏறி விட்ட ஒரு நடிகர் செட்டில் செய்யும் அக்கிரமம் தாங்க முடியவில்லை என்று லைட் பாயிலிருந்து சக நடிகர்கள் வரை புலம்புகிறார்கள்.  ஒரு படத்திற்கே இப்படி என்றால்  தென்னிந்தியாவே கொண்டாடும் சூப்பர் ஸ்டாரான உங்களை எண்ணிப் பார்க்கிறேன்.  ஆனால் நீங்களோ இன்னமும் பெங்களூர்ருவில் கண்டக்டராக இருந்த போது எப்படி இருந்தீர்களோ அப்படியே இருக்கிறீர்கள்.  சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் நான் துக்ளக் அலுவலகத்துக்கு சோ அவர்களை சந்திக்கச் சென்றிருந்தேன்.  வாசலில் நான்கு ஐந்து பேர் நின்றிருந்தார்கள்.  பக்கத்துக் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றார்கள்.  நீங்கள் வந்திருப்பதாகவும் உங்களைச் சந்திக்க நின்று கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள்.  உடனே காரில் ஏறிப் போய் விடாமல் நின்று நிதானமாக எங்களோடு பேசி விட்டுப் போவார்; அதற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றார்கள்.
அந்தப் பண்பு ஒன்று போதும், தமிழக அரசியலில் நீங்கள் நுழைவதற்கு.  இந்தக் கடிதத்தை நான் எழுதக் காரணமாக அமைந்ததும் அதுதான்.
மை டியர் ரஜினி, நான் பாஜக கட்சியைச் சேர்ந்தவன் இல்லை.  இன்றைய தமிழக அரசியல் சூழ்நிலையின் காரணமாகவே இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறேன். உங்களைப் போலவே நானும் மஹா அவ்தார் பாபாவை குருவாக ஏற்றுக் கொண்டிருப்பவன்.
தங்கள் அன்புள்ள,                           மைலாப்பூர்,
சாரு நிவேதிதா              charuonline.com/

கருத்துகள் இல்லை: