செவ்வாய், 4 மார்ச், 2014

பாரதிராஜாவின் இனவாதத்திற்கு கேரள அரசின் பரிசு

தமிழ் சினிமாவில், கன்னடர்கள், மலையாளிகள் ஆதிக்கம்… தமிழகத்தில் திருமலை நாயக்கர் வழிவந்த தெலுங்கர்களின் ஆதிக்கம்..
திராவிட இயக்க அரசியல் தமிழனுக்கு எதிரானது… பெரியார் சரியில்லை..
ஏன் தமிழனுக்குத் தலைமை தாங்க தமிழனே கிடைக்கிலையா.. தமிழனுக்கு அந்தத் தகுதியில்லையா?’
என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் தீவிர இனவாதம் பேசிய இயக்குநர் பாரதிராஜா வெட்கப்படும்படியாக அவரை,
கேரள ‘காங்கிரஸ்’ அரசு, திரைப்பட விருது கமிட்டி தலைவராக நியமித்துள்ளது.
2013-ம் ஆண்டுக்கான சிறந்த மலையாளப் படம், கலைஞர்களைத் தேர்ந்தெடுக்க 7 பேர் அடங்கிய விருது கமிட்டிக்கு தலைவராக பாரதிராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதை தமிழனுக்குக் கிடைத்த பெருமை என்ற பாணியில்,
பாராதிராஜாவும் ‘பெருந்தன்மை’யோடு ஏற்றுக் கொண்டுள்ளார்.
”சிறந்த மலையாளப் படங்களைத் தேர்ந்தேடுக்கும் கமிட்டிக்குத் தலைவராக உங்களுக்கு ஒரு மலையாளிகூட கிடைக்கிலையா? ஒரு மலையாளப் படத்தைக் கூட இயக்காத தமிழன் பாரதிராஜாதான் மலையாளப் படங்களை தேர்ந்தெடுக்கும் குழுவுக்குத் தலைவரா? இது என்ன கேரளாவா? தமிழ்நாடா?“
என்று மலையாள இனவாதிகள் யாராவது பேசியிருப்பார்களா?
அப்படி பேசினால் அது சரியா? தப்பா? mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை: