வெள்ளி, 8 நவம்பர், 2013

BSP MP இன் மனைவி தீயால் சுட்டார்; நாய் போல் நடத்தினார் ! பெண் மரணம் !

புதுடில்லி: மாயாவதியின் தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி., ஒருவரின் மனைவி வேலைக்கார பெண்களை தீயினால் சுட்டும், மிருகத்தை விட கேவலமாகவும் நடத்திய கொடுமை தற்போது வெளியே தெரிய வந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் ஜூவான்பூர் தொகுதியை சேர்ந்தவர் தனஞ்செயின். இவர் பகுஜன்சமாஜ் கட்சி எம் .பி., ஆவார். இவரது மனைவி ஜாக்ரிதிசிங். இவரது வீட்டில் ஒரு பெண் காயமுற்ற நிலையில் பிணமாக கிடந்தார். இது தொடர்பான விசாரணையில் இவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவரது வீட்டில் வேலை பார்த்த மீனாசர்தார் என்ற பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். இவர் தற்போது ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். கொத்தடிமை நடந்து கொண்டிருக்கிறது ...இன்னும் தெரியாமல் எங்கெங்கு இருக்கிறதோ இதை அவாள் செய்திருந்தால் சும்மா அலறியிருக்கும். இது ஒரு நவீன தீண்டாமை, நவீன தலித் கொடுமை. எங்கே போயி முட்டி கொள்வது. யாரும் வாயை திறக்க மாட்டார்கள்  

இது குறித்து மாவட்ட எஸ்,பி., கூறுகையில்; எம்.பி., தற்போது மனைவியிடம் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். இவருக்கும் எனக்கும் இப்போது தொடர்பு இல்லை என கூறினார். இந்த ஜாக்ரித்சிங் பணிபெண்களை குறிப்பிட்ட நேரத்தில் வேலை செய்து முடிக்கா விட்டால் அவருக்கு பழுக்க வைத்த இரும்பு ராடு மூலம் சூடு போட்டுள்ளார். மேலும் தரையில் சாப்பாடு போட்டு வாயினால் சாப்பிட வைத்துள்ளர். ஒரு மிருக குணம் கொண்டவராக இருந்துள்ளார். ஜாக்ருதி என்னை மிருகம் போல் நடத்தினார். குப்பையில் போடப்பட்ட உணவை சாப்பிடச் செய்தார். அசிங்கமாக திட்டுவார். பல நாட்கள் சாப்பாடு போடுவதில்லை என கூறினார்.

இதனிடையே தான் யாரையும் தாக்கவில்லை என கூறியுள்ளார்.

ஜாக்ருதியின் கணவரும் எம்.பி.,யுமான தனஞ்செய் கூறுகையில், யாரையும் தாக்கவில்லை. ஆதாரங்களை அழிக்கவில்லை. எனது மனைவி வேலைக்கார பெண்ணை தாக்கியது குறித்து எனக்கு தெரியாது.எனது மனைவியின் நடவடிக்கை குறித்து யாரிடமும் கூறவில்லை என கூறினார்..

கருத்துகள் இல்லை: