ஹைதி (Haiti) நாட்டில் உள்ள ஐ.நா. அமைதிப்படையில் (UN Peace Keeping
Mission in Haiti – MINUSTAH) இலங்கை ராணுவத்தை சேர்ந்த வீரர்களையும் இணைத்துக் கொண்டுள்ளது, ஐ.நா. (மேலேயுள்ள போட்டோவை பார்க்கவும். யூனிபார்மில் ஐ.நா. பேட்ச்சுடன் இலங்கை ராணுவ வீரர்கள்) மொத்தம் 750 இலங்கை ராணுவ வீரர்களை அமைதிப் படையில் பணிபுரிய அனுப்பி வைக்குமாறு இலங்கை அரசிடம் ஐ.நா. கோரிக்கை விடுத்ததை அடுத்து, இன்று இலங்கை ராணுவத்தின் சின்ஹா ரெஜிமென்ட் படைப்பிரிவில் இருந்து 400 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை ராணுவத்தை சேர்ந்த 750 வீரர்கள் உட்பட, இலங்கை முப்படைகளையும் சேர்ந்த மொத்தம் 1,071 பேரை அனுப்பி வைக்கும்படி கோரியிருக்கிறது, ஐ.நா. “இலங்கை ராணுவ வீரர்கள் ஹைதி நாட்டின் அனைத்து நகரங்களிலும், வீதி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மக்களை வன்முறையாளர்களிடம் இருந்து காப்பாற்றும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது, ஐ.நா. viruvirupu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக