சனி, 6 ஏப்ரல், 2013

சோனியாஜியின் மருமகன்ஜி ஊழழை அம்பலப்படுத்திய அதிகாரிக்கு 44-வது ட்ரான்ஸ்ஃபர்!

சாதா எம்.எல்.ஏ.வின் லீலைகளை அம்பலப்படுத்தினாலே போட்டு அடிப்பார்கள். இந்த லட்சணத்தில், சோனியாஜியின் மருமகன்ஜியில் கை வைத்தரரை போட்டு அடிப்பது மட்டுமல்ல, ஓட ஓட அடிப்பார்கள் என்பது தெரிந்ததுதான். அப்படி ஓட ஓட அடிவாங்கிக் கொண்டு இருக்கிறார் ஒரு அதிகாரி.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிலமோசடியை அம்பலப்படுத்தி அரசியல் புயலை உருவாக்கிய ஹரியானா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கேம்கா, தற்போது வெற்றிகரமாக 44-வது முறையாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஹரியானா மாநிலத்தில் ஏராளமான விளைநிலத்தை அடிமாட்டுக்கு வளைத்துப் போட்டு அதை டி.எல்.ப். நிறுவனத்துக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்தார் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா என்று கடந்த ஆண்டு புகார் எழுந்தது. இது அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியது.

இது தொடர்பான புகார்களை விசாரித்து வந்த அசோக் கேம்கா, “விவசாயிகளிடம் நிலம் பலவந்தமாக பறிக்கப்பட்டது” என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார். அதையடுத்து சுடச்சுட உடனடியாகவே பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அதன் பின்னர் ஓராண்டுக்குள் 3 முறை வெவ்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கடைசியாக ஹரியானா விதை அபிவிருத்தி கழகத்தில் நிர்வாக மேலாளராக அவர் பணியாற்றி வந்தார். அங்கும் கேம்கா சும்மா இருக்கவில்லையே.. விதை கொள்முதல் ஊழலை வெளிக்கொண்டு வந்து சி.பி.ஐ. விசாரணைக்கும் பரிந்துரைத்தார்.
இப்போது அவர் திடீரென தொல்லியல் துறைக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டிருக்கிறார். அவரது 20 வருட அரசுப் பணி காலத்தில் இது 44-வது பணியிட மாற்றம். அதுவும் பகல் 3.30 மணிக்கே அவரை அலுவலகத்தை விட்டு போகச் சொல்லிவிட்டு இரவு 7.30 மணிக்குத்தான் டிரான்ஸ்பர் ஆர்டர் கொடுத்திருக்கின்றனர் என்று குமுறியிருக்கிறார் கேம்கா.
தொல்லியல்துறையில்தான் சோனியா குடும்பத்தில் இருந்து யாரும் ஒண்ணுமே பண்ணலையோ, என்னவோ
/viruvirupu.com/

கருத்துகள் இல்லை: