திங்கள், 1 ஏப்ரல், 2013

தங்கச்சிமடத்தில் போலீசார் துப்பாக்கி சூடு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள தங்கச்சிமடத்தில் ஏற்பட்ட
கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.தங்கச்சிமடம் அருகே கிரிக்கெட் விளையாடுவதில் இரு பிரிவினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பதற்றத்தை தணிக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: