செவ்வாய், 2 ஏப்ரல், 2013

விஜயகாந்த்: நாடாளுமன்ற தேர்தலை தேமுதிக புறக்கணிக்கும்

வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தேமுதிக தலைவர்
விஜயகாந்த் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற அக்கட்சி பொதுக்கூட்டத்தில் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த், இலங்கை தமிழர்களின் நலனைக் காக்க நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தார். மேலும் தமது கட்சியைப் போன்று இலங்கை தமிழர்களை காக்க மற்ற கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் ரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவுடன் திமுக கூட்டணி அமைக்கக்கூடும் என்றும், இதற்கான பேச்சுவார்த்தை இருதரப்புக்குமிடையே ந்டைபெற்றதாகவும் கூறப்பட்ட நிலையில், விஜயகாந்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரப்ரப்பை ஏற்படுத்தி உள்ளது. vikatan.com

கருத்துகள் இல்லை: