செவ்வாய், 11 செப்டம்பர், 2012

உதயகுமார், புஷ்பராயன் இன்று இரவு (வைகோ தலைமையில்?) கைதாகின்றனர்

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வரும் போராட்டக் குழுவின் தலைவர்களாக உள்ள உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டோர்,  கூடங்குளம் காவல் நிலையத்தில் இன்று இரவு 8 மணிக்கு நேரில் வந்து கைதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.செய்தியாளர் ஒருவருக்கு அளித்துள்ள தகவலில், மக்கள் மீது காவல்துறையினர் நடத்தும் தாக்குதலை தடுத்து நிறுத்தவே, மக்களுக்காகவே நாங்கள் கைதாகிறோம்.மேலும், மக்கள் மீது எந்த வன்முறையும் நடப்பதை நாங்கள் விரும்பவில்லை. எப்படி இருந்தாலும், அணு உலைக்கு எதிரான எங்களது போராட்டம் தொடர்ந்து அறவழியில் நடைபெறும். எங்களது போராட்டத்துக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாகக் கூறுவது அபாண்டமானது. போராட்டக்காரர்கள் போலிஸாரை தாக்கியதாகக் கூறுவதில் உண்மையில்லை, அவர்கள் தடியடி நடத்தியதற்கு பொய்க் காரணம் கூறுகின்றனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: