கல்முனை நகர்ப் பிரதேசத்தில் அமைந்துள்ள இஸ்லாமபாத் சுனாமி வீட்டுத்திட்டத்தில் இளைஞர் ஒருவர் மர்ம மனிதனால் தாக்கப்பட்ட சம்பவமொன்று இன்று இடம்பெற்றது. இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர் ஏ.சபீக் எனும் இளைஞராவார்.
சுனாமி வீட்டுத்திட்டத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் மர்மமனிதர் ஒருவர் நுழைய முற்பட்ட போது அங்கு வருகை தந்த அந்த வீட்டு இளைஞனால் தடுக்கபட்ட வேளை மர்மமனிதன் இளைஞனின் கையில் கூரிய ஆயுதத்தினால் தாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தற்போது இப்பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதோடு அக்கிராம மக்கள் மர்ம மனிதனைத் தேடும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக