வியாழன், 18 ஆகஸ்ட், 2011

போர்ச்சுகல் நாட்டு குடியுரிமை பெற கோவா மக்கள் போட்டா போட்டி போட்டு வருகின்றனர்.

கோவா பகுதியை போர்ச்சுகீசியர்கள் நீண்ட காலம் ஆண்டனர். இந்தியாவை பிரிட்டிஷார் ஆட்சி செய்தபோது கோவா போர்ச்சுகல் நாட்டினராலும் வசமும், புதுச்சேரி பிரான்ஸ் நாட்டினராலும் ஆளப்பட்டு வந்தன.

தங்களது ஆட்சி காலத்தில் பிறந்தவர்களுக்கும் அதற்குப் பின்னர் 2 தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கும் போர்ச்சுகல் நாடு குடியுரிமையை வழங்கி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் இதற்கான விதிகளையும் அந்த நாடு தளர்த்தியது. இதையடுத்து அந் நாட்டுப் பிரஜைகளாகும் கோவா பகுதியினரின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. சமீப காலமாக இது மேலும் வேகம் பிடித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1,855 பேர் போர்ச்சுகீசிய நாட்டு குடியுரிமையைப் பெற்று அந் நாட்டுப் பிரஜைகளாகியுள்ளனர்.
2008ல் 312 பேரும், 2009ல் 432 பேரும், 2010ல் 807 பேர் அந்த நாட்டு குடியுரிமையைப் பெற்றுள்ளனர். 2011ம் ஆண்டில் முதல் 3 மாதங்களிலேயே 304 பேர் தங்கள் இந்தியக் குடியுரிமையை விட்டுவிட்டு போர்ச்சுகீசியர்களாகியுள்ளனர்.

இது குறித்து வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இயக்குனரகத்தின் தலைவர் யு.டி.காமத் கூறுகையில், போர்ச்சுகீசிய குடியுரிமை பெற்று அந் நாட்டு பாஸ்போர்ட் பெற்றுவிட்டால், ஐரோப்பாவுக்குள் நுழைய வாய்ப்பு கிடைக்கிறது. அத்தோடு, ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெறவும் வசதியாகிறது. இதனால் தான் அந் நாட்டுப் பிரஜைகளாக போட்டி போட ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு அந் நாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இந்தியாவில் அரசு வேலையில் சேர முடியாது, இந்தியாவில் விவசாய நிலங்களை வாங்க முடியாது. இந்தியாவில் ஓட்டுரிமையையும் இழப்பர் என்றார்.
கோவா மாநில தலைமை தேர்தல் அதிகாரி நாராயண் நவ்தி கூறுகையில், போர்ச்சுகீசியர்களாக மாறி வரும் மக்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது என்றார்.

விரைவில் இந்திய வல்லரசாக மாற இருக்கிறது எனவே தயவு செய்து போகாதீர்கள் ம்ம்ம் எங்கே கேட்க போகிறீர்கள்? 

கருத்துகள் இல்லை: