வியாழன், 1 செப்டம்பர், 2011

Credit Card இரண்டு புலிச் சந்தேக நபர்கள் பங்களுரில் கைது!

கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட இரண்டு புலிச் சந்தேக நபர்கள் பங்களுரில் கைது!

உலக அளவில் பாரிய கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட இரண்டு புலிச் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பங்களுர் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

மலேசியாவிலிருந்து இணையத்தின் ஊடாக தரவுகள் ஹெக் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு கோடி இந்திய ரூபா பெறுமதியான சொத்துக்கள் இருவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
கடன் அட்டை மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் மலேசியாவில் இருப்பதாகவும், இந்தியாவில் ஆறு முக்கியஸ்தர்கள் தலைமறைவாக இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.
39 வயதான ஷியாம் மற்றும் 25 வயதான வாசீம் பாஸா ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலிகளுக்கு தாம் பணம் வழங்கியதாக சந்தேக நபர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: