புதன், 31 ஆகஸ்ட், 2011

சோ, சு.சாமி, இராமகோபாலன், தினமலர்…பார்ப்பன கூட்டம் பச்சையாகவே

மூவர் தூக்கை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் போர்க்குணமிக்க போராட்டங்கள் நடந்து வருகின்றன. மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள் என அனைத்து தரப்பினரும் சாலை மறியல், ரயில் மறியல், மத்திய அரசு அலுவலக முற்றுகை என்று தங்கள் உணர்வுகளை வீரஞ்செறிந்த முறையில் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இந்த போராட்டச் செய்திகள் ஆங்கில ஊடகங்கள் மற்றும் தமிழக பார்பன ஊடகங்களில் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன.
இந்தப் போராட்டங்களெல்லாம் மக்களிடம் அரசியல் ஆதரவற்ற 2% பெயர்ப்பலகை அமைப்புகள் நடத்தி வருவதாக துக்ளக் சோ ஊளையிடுகிறார். மற்றபடி மூவர் தூக்கு பேஷாக நடைபெறும், முழு தமிழகமும் அமைதியாக அதை ஆதரிக்கின்றது என்பது போல அவர் பேசுகிறார். இந்து முன்னணி இராம கோபாலன் மூவர் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கூடாது என்று பகிரங்கமாக பேசி வருகிறார்.
சுப்ரமணிய சாமியோ இத்தனை ஆண்டுகளாக கருணை மனு மீதான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதற்காக ஆகஸ்டு 15-ஆம் தேதி நீதிமன்றம் செல்ல இருந்ததாகவும், அதைக் கண்டு பயந்து மத்திய அரசு கருணை மனுவை நிராகரித்திருப்பதாக திமிரோடு பேசுகிறார். மேலும் இவாள்களின் முதல்வரான பாசிச ஜெயலலிதா தூக்குத் தண்டனையை ரத்து செய்ய தனக்கு அதிகாரமில்லை என்று கூறியிருப்பது சரிதான் என்று மெச்சுகிறார் இந்த மாமா சாமி. எனவே இனி யாரும் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய முடியாது, செப்டம்பர் 9 அன்று தூக்குதண்டனை நிறைவேற்றப்படும் என்றும் யாரெல்லாம் இதை எதிர்க்கிறார்களோ அவர்களெல்லாம் தேசத்துரோகிகள் என்று நரித்தனமாக, பார்ப்பன வெறியுடன் ஊளையிடுகிறார்.
மூவர் தூக்கை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் எங்கும் நடக்கும் போராட்டங்கள் குறித்து தினத்தந்தி, தினகரன் முதலான நாளேடுகள் விரிவாக செய்திகள் வெளியிடும் போது பார்ப்பன தினமலரோ அப்படி ஒரு செய்தியைக்கூட வெளியிடவில்லை. மாறாக வேலூரில் எப்படி தூக்கு போடுவார்கள், தூக்கு போடுபவர்கள் யார், அவர்கள் ஆந்திராவிலிருந்து வருகிறார்கள், அவர்களுக்கு ஒரு தூக்கிற்கு நூறு ரூபாய் சம்பளம், வேலூர் சிறையைச் சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்பு, தமிகத்தில் உள்ள அகதி முகாம்களை உளவுத் துறையினர் கண்காணிக்கிறார்கள் என்று நீரோ மன்னனை போல பார்ப்பன பிடில் வாசித்து மகிழ்கிறது இந்த பார்ப்பன நரி.

போராட்டச் செய்திகளை அதிகம் வெளியிட்டால் பத்திரிகை அதிகம் விற்கும் என்ற சந்தை இலாபத்தை விட பார்ப்பன மேலாதிக்கத்தை முன்வைத்தே தினமலர் எழுதுகிறது. காலணாவுக்கு தேறாத அண்ணா ஹசாரே போங்காட்டங்களை பக்கத்திற்கு பக்கம் பீத்தும் இந்த் தினமலர் செங்கொடியின் தியாகத்தை எள்ளி நகையாட வேண்டுமென்றால் எத்தனை வன்மம் வேண்டும்?
இதற்கு மேல் தங்கபாலு, இளங்கோவன் போன்ற பீஸ் போன பல்புகளும் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென்று அவ்வப்போது கத்தி வருகின்றன. அண்ணா ஹசாரேவின் இத்துப் போன் போராட்டங்களையே மாபெரும் சுதந்திரப் போராட்டமாக சித்தரித்து உருவாக்கிய ஆங்கில ஊடகங்கள் அனைத்தும் தமிழக மக்களின் போராட்டங்களை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்கின்றன. இது குறித்து இவர்கள் எப்போதாவது செய்தி ஒளிபரப்பினால் அதற்கு தமிழகம் சார்பில் பேசுபவர்களாக சு.சாமியும், சோவுமே விகாரமாகத் தோன்றுகிறார்கள்.
பா.ஜ.க கும்பலும் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென்றுதான் எப்போதும் வலியுறுத்தி வருகிறார்கள். அதில் மூவர் தூக்கை விட அப்சல் குரு என்ற காஷ்மீரத்து அப்பாவியை தூக்கில் போட்டே ஆக வேண்டுமென்பது இந்தக் கூட்டத்தின் நோக்கம்.
ஆக ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் பார்ப்பனக் கூட்டம் தனது முகத்தை ஒளித்து வைக்காமல் பச்சையாகவே இந்தப் பிரச்சினையில் காட்டிக் கொள்கிறது. தனக்கு அதிகாரமில்லை என்று ஜெயா கூறிவிட, அதற்குப் பின்பாட்டு பாடும் இந்தப் பார்ப்பனக் கூட்டம் கூடவே இனி யாரும் மரண தண்டனையை தடுத்து நிறுத்த முடியாது என்று கொக்கரிக்கிறது.
தற்போது மூவர் தூக்கு உயர்நீதிமன்றத்தால் எட்டு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது கூட இந்தக்கூட்டத்திற்கு தாங்க முடியாததாக இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் இப்படி ஒரு இடைக்காலத்தடை கொடுத்திருப்பது தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று சோ கூறுகிறார். கூடவே ஜெயா கொண்டு வந்திருக்கும் தீர்மானம் கூட தீர்ப்பை மாற்றும் அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை என்று மகிழ்கிறார். எப்படியும் தூக்கு நிறைவேற்றப்படும் என்பதுதான் இவர் மட்டுமல்ல, காங்கிரசு, பா.ஜ.க, சு.சாமி, தினமலர் கூட்டத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதிகார, அரசு, ஊடக, முதலாளிகளது பலத்தில் காலத்தை ஓட்டும் இந்த பார்ப்பன பாசிஸ்டுக் கூட்டம் அந்த தைரியத்தில்தான் இப்படி பேச முடிகிறது. ஆனாலும் போராடும் தமிழக மக்கள் இந்தக் கூட்டத்தின் எண்ணத்திற்குக்கு வேட்டு வைக்கும் வண்ணம் தமது கோரிக்கையில் வெற்றி பெறுவார்கள். கூடவே இந்த பார்ப்பன பாசிஸ்டுகளுக்கும் ஆப்பு வைப்பார்கள்.

கருத்துகள் இல்லை: