வெள்ளி, 2 செப்டம்பர், 2011

கோண்டாவில் மர்ம மனிதனுக்கு 15 ஆம் திகதி வரை விளக்கமறியல்

யாழ். கோண்டாவில் தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலயப் பகுதியில் நேற்று பொதுமக்களினால் பிடிக்கப்பட்ட இனம் தெரியாத மர்ம மனிதனை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நிதிமன்ற நீதிபதி ஏ.ஏ ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார். இவர் ஒரு மனநோயாளி என பொலிஸார் நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்ததும் நீதிமன்ற கலரியில் நின்ற மக்கள் பெரும் சத்ததுடன் சிரித்து ஆரவாரித்தனர். அத்தோடு பொலிஸார் பெய்யுரைக்கின்றனர் என கோண்டாவில் மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிவான் மர்ம மனிதனை தகுந்த மனேதத்துவ நிபுணர்களிடம் காட்டி வைத்திய அறிக்கை சமர்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை: