வியாழன், 1 செப்டம்பர், 2011

யாழ் ஆலயங்களில் கொள்ளைக,ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாண இந்து ஆலயங்களில் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் குறித்த நபர்கள் கொள்ளைகளை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் பிரதேச மக்கள் குறித்த சந்தேக நபர்களை மடக்கிப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இனுவில் கந்தசுவாமி கோயிலில் கொள்ளையில் ஈடுபட முயற்சி செய்த போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கம் உள்ளிட்ட பல்வேறு பெறுமதி வாய்ந்த பொருட்களை குறித்த நபர்கள் கொள்ளையிட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சில பெறுமதி வாய்ந்த தங்க ஆபரணங்கள் ஏற்கனவே உருக்கப்பட்டு வேறும் ஆபரணங்களாக மாற்றப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: