சனி, 3 செப்டம்பர், 2011

அங்கவீனர்கள் என்ற போர்வையில் அதி பயங்கரமான புலிகள் வெளியேற்றம்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு வெளியேறும் முன்னாள் புலிகளுள் வலது குறைந்த நிலைக்கு ஆளான ஆபத்தான புலிகள் பலர் வெளியேறியுள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 20 வருடங்களுக்கு மேலாக புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்த இவர்கள் அங்கவீனர்களுக்கென வழங்கப்பட்ட சலுகைகளை பயன்படுத்தி நளுவிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு வெளியேறியவர்களில் 2003 ஆம் ஆண்டு வில்பத்து வனப்பூங்காவில் வைத்து இராணுவ உயர் அதிகாரியுடைய வாகனத்தின் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட புலித் தலைவர் ஒருவரும் கண்டி தலதா மாளிகை மீத தாக்குதல் நடத்த வந்த பயங்கரவாதி ஒருவரும் பார்வை இழந்தவர் என்று வழங்கிய சான்றிதழின் அடிப்படையில் வெளியேறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு புனர்வாழ்வு முகாம்களில் காணப்படும் அங்கவீனர்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மிகவிரைவில் வவுனியாவில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

புலி உறுப்பினர்களை சமூகத்துடன் இணைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக பலாத்காரமாக புலிகள் இயக்கத்திற்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட உறுப்பினர்களும் சிறுவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன் இரண்டாவது கட்டமாக வலது குறைந்தவர்களும் வயதானவர்களும் விடுவிக்கப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை: