ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

ஊரில் தற்போது நடக்கும் அதிகமான விபத்துக்கள் இப்படித்தான்

காரைதீவு பிரதான வீதியின் மாவடிப்பள்ளியில் கல்முனையை நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியும், அம்பாறையை நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்குநேராக ​மோதியதில் மூன்று பேர் படுகாயமடைந்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று இடம்பெற்ற இந்த வாகன விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: