வெள்ளி, 1 ஜூலை, 2011

சொத்து வரி கணக்கும் ஜெயலலிதாவின் அதிஷ்டமும்

1993-94-ம் ஆண்டுகளின் போதும் முதல்வராக இருந்த ஜெ. அப்போது சொத்து வரியை கணக்கில் காட்டவில்லையாம். அவர் பதவி போன பிறகு தி.மு.க. ஆட்சியில் 1996-ம் ஆண்டு எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்த்ரேட் கோர்ட்டில் சொத்து வரி உதவி ஆணையர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் இருந்த போது தன்னை அந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி (வழக்கம் போல) ஜெ. மனு கொடுத்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.
இப்போது காற்று மீண்டும் ஜெ. பக்கம் வீசத் தொடங்கியிருக்கும் வேளையில், உயர்நீதிமன்றத்தில் ஜெ. தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவரது கோரிக்கையை ஏற்று சொத்து வரி வழக்கிலிருந்து விடுவித்திருக்கிறார்.
“1993-94-ம் ஆண்டில் செல்வவரி கணக்கை செலுத்த தேவையில்லை என்று எனக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஆடிட்டர் மற்றும் சில சட்ட நிபுணர்கள் கூறிய இந்த ஆலோசனையை ஏற்று நான் செயல்பட்டேன். எனவே நான் வேண்டுமென்றே கணக்கு காட்டவில்லை என்று குற்றம்சாட்ட முடியாது.” என்று ஜெ. மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
நல்ல ஆடிட்டர்கள்! நல்ல நியாயம்!!
சொத்து வரி கணக்கும் ஜெயலலிதாவின் அதிஷ்டமும் 

கருத்துகள் இல்லை: