சனி, 2 ஜூலை, 2011

Raj Rajaratnam தண்டனைத் தீர்ப்பு அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டு

அமெரிக்க கோடீஸ்வரர் ராஜ் ராஜரத்தினத்துக்கான தண்டனை ஒத்திவைப்பு

late news http://namathu.blogspot.com
 ராஜ் ராஜரட்னத்திற்கு 11 ஆண்டு சிறை; அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க கோடீஸ்வரரான ராஜ் ராஜரத்தினத்தின் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கான தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் வர்த்தகம் மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் அவருக்கெதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் அமெரிக்காவில் குற்றவாளியாக காணப்பட்டு இருக்கின்ற கோடீஸ்வரரும், இலங்கை வம்சாவளித் தமிழருமான ராஜ் ராஜரட்ணத்துக்கான தண்டனை அடுத்த மாதம் 27 ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளது.

சட்டவிரோதமான முறையில் வர்த்கதம் நடத்த சதித் திட்டம் தீட்டியமை மற்றும் சட்டவிரோதமான முறையில் வர்த்தகம் நடத்தியமை ஆகியன சம்பந்தமாக 14 குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டன. வழக்கு விசாரணையின் போது அவர்மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.

இவர் குற்றவாளிதான் என்று மன்ஹட்டான் நீதிமன்றம் கடந்த மே 11 ஆம் திகதி தெரிவித்திருந்தது.. இவருக்கான தண்டனை இம்மாதம் 29 ஆம் திகதி அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் தற்போது தண்டனைத் தீர்ப்பு அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த ராஜ் ராஜரத்தினம் அமெரிக்காவில் கொடிகட்டி பறப்பது நமக்கு எல்லாம் பெருமை என்று எண்ணியிருந்தோம் இப்போதுதான் தான் சாயம் பூரணமாக வெளுத்துவிட்டது. படிக்காதவன் படித்தவன் பேதமில்லாமல் அவரர் தம் பங்குக்கு பிராடு பண்ணுவதே நம்மவர் கலாசாரம் ஆகிவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது,
கிரெடிட் கார்ட் மோசடி கூலிக்கு தாதா குண்டர் ரவுடியிசம் போன்ற குடிசை கைத்தொழில்கள் இவற்றை மறைக்க புலிவால் பிடித்தல் கொடி தூக்குதல் போன்ற காவடி எடுப்புக்கள்... ம்ம்ம்

raj and asha rajaratnam 

கருத்துகள் இல்லை: