ஞாயிறு, 26 ஜூன், 2011

சாரு நிவேதாவின் அந்தரங்க எழுத்து அரங்கேறுகிறது (adults only)

சாரு நிவேதிதா
படிப்பு முடித்த ஒரு இளம்பெண்.  வேலை பார்க்க வெளியே செல்ல முடியாத சூழ்நிலை, இணையம் மூலமாக சிறிய அளவில் டி.டி.பி போன்றதொரு வேலை  எடுத்து செய்பவள். கட்டுப்பெட்டியான குடும்ப வாழ்க்கையில் வெளியே தொடர்பு கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது இணையம். கணினிப் பெட்டியில் அந்தப்பெண் நேரம் செலவிடுவதை குடும்பத்தினரும் தடை செய்யவில்லை. கணினியில் பொழுதை செலவிடுவது வீட்டுச் சிறையை மீறுவதாக இல்லாததுதான் அந்த அனுமதிக்கு காரணம்.  இப்படித்தான் அவளது இணைய வாழ்க்கை தொடங்குகிறது.
ஆரம்பத்தில் பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டும், பின்னர் முக நூலில் – பேஸ்புக்கில் – தனி கணக்கு ஒன்று ஆரம்பிக்கிறாள். சிறு கவிதைகளையும், தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறாள். நட்பு வட்டம் விரிகிறது. பேஸ்புக்கில் சாருவின் வாசகர் வட்டம் அறிமுகமாகிறது , அதில் இணைந்து அங்கே கருத்துகளை எழுதுகிறாள். பெண் அதுவும் இளம்பெண் என்பதினாலேயே தான் இத்தனை சீக்கிரம் முகநூலில் பிரபலமாகியிருக்கிறோம் என்பதை அந்த பேதைப் பெண் உணர்ந்திருக்கவில்லை.
இதனால் அந்த பெண்ணோடு நட்புக் கொண்டவர்கள் அனைவரும் ஜொள்ளர்கள் என்று பொருளல்ல. ஆனால் பொது வெளியில் செயல்படும் ஒரு பெண் இந்த சமூக யதார்த்தத்தை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்தகைய அனுபவமோ, முதிர்ச்சியோ, வழிகாட்டலோ இல்லாததால் அந்தப்பெண் இதை நேர்மறையாக எடுத்துக் கொண்டு செயல்படுகிறாள். அவள் ஒரு இளம்பெண் என்று வாசகருக்கு உணர்த்துப் பொருட்டே அர் விகுதி போடாமல் அள் விகுதி போட்டு எழுதுகிறோம்.
சாரு நிவேதிதா
சாரு ஒரு பிரபலமான எழுத்தாளர் என்பது மட்டும் அதுவும் இணையத்தின் மூலம்தான் அந்தப் பெண்ணுக்குத் தெரியும். அவர் எழுதிய எதையும் அந்தப் பெண் படித்ததில்லை. பின்னர் சாரு அந்தப் பெண்ணின் ஒரு கவிதையைப் பாராட்டி தனது தளத்தில் வெளியிடுகிறார். மெல்ல மெல்ல உரையாடவும் செய்கிறார். அவர் என்ன மாதிரியான வக்கிரமான ஆபாசமான உரையாடல் நடத்தினார் என்பதை தமிழச்சியின் பதிவுகளும், ஆதாரங்களும் தெரிவிக்கின்றன. இங்கும் அதன் ஸ்கீரீன் ஷாட் போட்டிருக்கிறோம். இந்த உரையாடல்கள் சாரு செய்தபவைதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கை ஊட்டி இந்த விசயத்தை வெளிவர முயற்சி செய்த தோழர் தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்! இது குறித்து முன்னரே தெரிந்திருந்தாலும் வேலை காரணமாக உடன் வினவில் எழுதவில்லை.
அந்தப் பெண்ணோடு வக்கிர உணர்வுடன் சாரு நடத்திய பொறுக்கித்தனத்தை யாரும் புரிந்து கொள்ளலாம். ஆனால் அது மட்டுமே இங்கு விசயமல்ல. இந்தப் பொறுக்கித்தனம் என்ன மாதிரி ஆரம்பித்து எங்கே சென்றது என்பதை பருண்மையாக ஆய்வு செய்தால்தான் அதன் விகாரத்தை உணர முடியும்.

இந்த சாரு நிவேதா என்று அறியப்படுகிற தமிழ் எழுத்தாளன் நாம் எழுத முடியாத அளவு மிகவும் வல்கராக எழுதியுள்ளார், அந்த விபரங்களை இங்கு நாம் குறிப்பிட்ட vinavu.com  க்கு சென்று படித்து பயன் பெறுங்கள்

http://www.vinavu.com/2011/06/24/charu/


கருத்துகள் இல்லை: