செவ்வாய், 28 ஜூன், 2011

சாய் அறக்கட்டளை நன்கொடை விவரம் கேட்டு ஆந்திர அரசு நோட்டீஸ்

புட்டப்ர்த்தி: சாய்பாபா அறக்கட்டளையின் நன்கொடை மற்றும் செலவுக் கணக்கு போன்ற விவரங்களை 10 நாட்களுக்குள் அளிக்குமாறு அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா ஆசிரமத்தில் பாபாவின் தனி அறையில் இருந்து ரூ. 11.56 கோடி ரொக்கம், 98 கிலோ தங்கம் மற்றும் 307 கிலோ வெள்ளி இருந்தது கண்டிபிடிக்கப்பட்டது. இதையெல்லாம் வங்கியில் டெபாசிட் செய்யப்போவதாக அறக்கட்டனை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அடுத்த 2 நாட்களில் அறக்கட்டளைக்கு சொந்தமான காரில் ரூ. 35 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் நேற்று அறக்கட்டளை உறுப்பினர் சீனிவாசனிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் அறக்கட்டளை தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிவிக்குமாறு அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக சாய் அறக்கட்டளைக்கு பக்தர்கள் அளித்த நன்கொடை விவரம், வளர்ச்சிப் பணிகளுக்காக அறக்கட்டளை செய்த செலவுக் கணக்கு, வங்கி இருப்பு, அறக்கட்டளை உறுப்பினர்களின் நிரந்தர முகவரி, அவர்களது தொழில் போன்ற பல விவரங்களை இன்னும் 10 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று மாலை அறக்கட்டளை உறுப்பினர்களின் அவரசக் கூட்டம் நடந்தது. இதில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அறக்கட்டளைக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை எவ்வாறு போக்குவது, ஆந்திர அரசுக்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது என்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

English summary
Andhra government has sent a notice to the Sai Trust asking it to give the deatils of the donations, expenditures, bank balance, etc. within 10 days. It has also asked the trustees to give their permanent address and their occupation.

கருத்துகள் இல்லை: