செவ்வாய், 28 ஜூன், 2011

கூடங்குளம் அணு உலை தலைமை வடிவமைப்பாளர் மரணம்

ரஷ்யாவில் நேற்று நடந்த விமான விபத்தில் 44  பேர் பலியாயினர் .

மாஸ்கோவிலிருந்து petrojavotsk  க்கு சென்ற விமானம் தரையிறங்கும்போது வெடித்து சிதறியது .

இவ்விபத்தில் பலியான 44  பேரில் பெரும்பாலோனோர் அணு விஞ்ஞானிகள் என்பது குறிப்பிடத்தக்கது .
இவ்விபத்தில் தமிழ் நாட்டில் உள்ள கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் VVER  மென்னீர் ரக அணு உலையின் தலைமை வடிவமைப்பாளர் செர்கே ரிசொவ் பலியானார் .

இவரின் மரணம் ரஷ்ய அணு விஞ்ஞானிகளையும் இந்திய அணு விஞ்ஞானிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .


மூன்று வருடங்களுக்கு முன்னர் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் தலைமை இயக்குனர் சுனில் குமார் அகர்வால் திடீர் உடல் நலக் குறைவால் மரணமடைந்தார் .
கடந்த ஆண்டு உசிலம் பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தற்போது கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இயக்குனராக இருக்கும் காசிநாத் பாலாஜி படுகாயமடைந்தார் .சம்பவத்தில் அவரது மனைவி உயிரிழக்க நேரிட்டது .

சில வருடங்களுக்கு முன்பாக ஜூனியர் விகடன் பத்திரிகையில் கொல்ல வரும் கூடங்குளம் எனும் கட்டுரை வெளிவந்துகொண்டிருந்தது .அப்போது அது சற்று வேடிக்கையாக இருந்தது .

கூடங்குளம் அணு உலை முக்கிய அதிகாரிகளை மட்டும்  கொல்லுமா அல்லது தமிழக மக்களையும் கொல்லுமா என்பது தெரியவில்லை .
http://koodalbala.blogspot.com/

கருத்துகள் இல்லை: