சனி, 7 மே, 2011

கருத்துக்களை கருத்துக்களாலேயே எதிர்கொள்ள தாம் தயார்.அமைச்சர் டக்ளஸ் தேவானந்த

பொய்யான தகவல்களையும் திரிபுபடுத்தப்பட்ட தகவல்களையும் ஊடகங்கள் தொடர்ந்தும் வெளியிட்டு வருவதாக ஈபிடிபியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த குற்றம் சுதத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஈபிடிபின் கொள்கையை சரியாக விளங்கிக் கொள்ளமல் சில ஊடங்கள் தம்மீது சேறு பூசுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். குடாநாட்டில் இனந்தெரியாதவர்கள் செய்யும் தவறுகள் அனைத்தும் ஈபிடிபியினரித் தலையிலேயே வந்து விடிவதாக தெரிவித்த அமைச்சர், தீவுப் பகுதி என்றால் பல மடங்கு குற்றச்சாட்டுக்கள் தம்மீது விழும் எனவும் கூறினார்.

கருத்துக்களை கருத்துக்களாலேயே எதிர்கொள்ள தாம் தயார் என நீண்டகாலம் கூறி வந்துள்ளதாகவும் வம்புப் பண்ண வந்தால் அது வேறு எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: