சனி, 7 மே, 2011

மீசாலை விக்னேஸ்வரா, ஆசிரியர்களின் வன்முறைப்போதனை இன்னும் ஓயவில்லை

newsஅடி வாங்கிய மாணவி மயக்கம் அடித்த ஆசிரியருக்கு மாற்றம்  

ஆசிரியரிடம் அடி வாங்கிய மாணவி மயக்கமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, தண்டனை வழங்கிய ஆசிரியருக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டது.மீசாலை விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றது.

தரம் 8 இல் கற்கும் மாணவி ஒருவர் வீட்டுப் பாடம் செய்யாமல் வந்ததன் காரணமாக ஆசிரியரால் தண்டிக்கப்பட்டார்.  சம்பவத்தைத் தொடர்ந்து அழுது கொண்டிருந்த மாணவி திடீரென மயங்கி வீழ்ந்தார் என்றும் பின்னர் அவர் அவசரமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் என்றும் பாடசாலைத் தகவல்கள் கூறின.சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவி, அவசர முதலுதவியின் பின்னர் வீடு திரும்பினார்."மாணவிக்கு முட்டு வியாதி இருந்துள்ளது. ஆசிரியரிடம் அடி வாங்கிய பின் தொடர்ந்து அவர் அழுததால் திடீரென மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். நாம் அவரை உடனடியாக வைத்திய சாலையில் சேர்ப்பித்தோம்'' என்று தெரிவித்தார் பாடசாலை அதிபர்.சம்பவம் குறித்து வலயக் கல்வித் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆசிரியரை எதிர்.
 ஆசிரியர்களின் வன்முறைப்போதனை இன்னும் ஓயவில்லை 

கருத்துகள் இல்லை: