வெள்ளி, 6 மே, 2011

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர் அட்டூழியம்,250க்கு மேற்பட்ட அதிவேக விசைப்படகுகள்

யாழ். நெடுந்தீவுப் ஆழ்கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை 250க்கு மேற்பட்ட அதிவேக விசைப்படகுகள் மூலம் ஊடறுத்து உள்நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு வருவதாக நெடுந்தீவு கடற் தொழிலாளர்களினால் நெடுந்தீவுக்கு பொறுப்பாக இருக்கும் கடற்படையினரிடம் முறையிட்டுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை சுமார் 200 முதல் 250 மேற்பட்ட இந்திய அதிவேக விசைப்படகுகளின் உதவியுடம் இந்திய மீனவர்கள் பலர் நெடுந்தீவுக் கடற்பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் தங்கள் தொழில் செய்யமுடியாதவாறு கரைதிரும்பியுள்ளதாக நெடுந்தீவு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய மீனவர்களது அத்துமீறிய ஊடுரூவல் காரணமாக தங்களது கடற் தொழில் உபகரணங்களுடன் தாங்கள் கரைதிரும்பியுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒருமாதமாக இந்திய மீனவர்களது கடல் நடமாட்டம் இல்லாதிருந்த வேளையில் தற்போது இன்று அதிகரித்து இருப்பது கவலை தரும் விடயம் என நெடுந்தீவு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: