புதன், 4 மே, 2011

யாழ்தேவி ஓமந்தை வரை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது

கொழும்புக் கோட்டையில் இருந்து புறப்படும் யாழ்தேவி ஓமந்தை வரை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. வடபகுதியில் புகையிரத நிலையங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் முதலாவது புகையிரத நிலையம் ஓமந்தையில் இம்மாதம் திறந்து வைக்கப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு கோட்டையிலிருந்து தாண்டிக்குளம் வரை மேற்கொண்ட யாழ்தேவியின் சேவை இம்மாதம் 28ஆம் திகதி முதல் ஓமந்தை வரை விஸ்தரிக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை: